Wednesday, October 1, 2008

அன்பின் வடிவே

அன்பின் வடிவே உயிரின் வடிவே
என்னைத் தேடும் இதய தெய்வம்
ஆராதனை ஆராதனை(2)

உயிரைக்கொடுக்கும் அன்பு
உறவில் மலரும் அன்பு(2)
உள்ளம் கவர்ந்த அன்பு
உயிரில் கலக்கும் அன்பு(2)
உயர்ந்து நிற்கும் அன்பு
உலகம் ஏங்கும் அன்பு
உண்மை பயக்கும் அன்பு
அன்பு செய்யும் அன்பு(2)

எங்கும் நிறையும் அன்பு
என்னைக் காணும் அன்பும்(2)
எதையும் செய்யும் அன்பு
எனக்காய் ஏங்கும் அன்பு(2)
என்னைக் காக்கும் அன்பு
என்னில் வாழும் அன்பு
என்றும் வாழும் அன்பு
அன்பு செய்யும் அன்பு(2)

பணிகள் புரிய வந்தாய்

பணிகள் புரிய வந்தாய் சீடர்
பாதம் கழுவி பணிந்தாய்
அன்பை வளர்க்கும் உறவாய் இயேசு
தன்னை ஈந்தார் உணவாய் -பணிகள்

தொட்டதும் தீர்ந்தது தொழுநோய்
சொல்லைக் கேட்டதும் அகன்றது அலகை
கேட்டதும் பலுகிய தப்பம் அதைப்
பகிர்ந்ததும் நின்றது பசியே.....

அழைத்ததும் பிறந்தது மாற்றம் அவ‌ர்
ஜெபித்த‌தும் வ‌ந்த‌து உயிரே
ம‌ன்னிப்பும் த‌ந்த‌து ம‌கிழ்ச்சி
அதை உண‌ர்ந்த‌தும் க‌னிந்த‌து வாழ்வே......

Tuesday, September 30, 2008

பாடுவாய் எந்தன் நாவே

பாடுவாய் எந்தன் நாவே மாண்புமிக்க இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர்தம்
பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
‌தேவ இரத்த இரகசியத்தை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே
மாசில்லாத கன்னியினின்று
நமக்கென்றே பிறக்கலானார்
அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான
‌வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே
வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில்
சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின்
உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர்
பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத் தாமே திவ்ய உணவாய்
தம் கையாலே அரிளினாரே

ஆணி கொண்ட உன்

ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தால் உம்மைக் கொன்றேனே
ஆயனே என்னை மன்னியும்

வலது கரத்தின் காயமே-2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே-2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே-2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே-2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

தேவாலய வலப்புறமிருந்து

தேவாலய வலப்புறமிருந்து தண்ணிர்
புறப்படக் கண்டேன் அல்லேலூயா
அந்த தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்று கூறுவர்
அல்லேலூயா-(3)

ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய் பெறுக
‌ஆதியில் இருந்தது போல இன்றும் என்றும்
நித்தியமாகவும் ஆமென்

மாண்புயர் இந்த

மாண்புயர் இந்த அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
‌புதிய நியம முறைகள் வருக‌
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாலாக் குறையை நீக்க‌
விசுவாசத்தின் உதவி பெறுக‌

பிதா அவர்க்கும் சுதனவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவுமாக‌
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக- ஆமென்

பதுவையோனே புதுமையில்

பதுவையோனே புதுமையில் புனிதா
பார் புகழ் புண்ணியனே
பாரில் எங்கள் குறையகல‌
பரமனை வேண்டிடுவாய்(2)

பாத்திரனே பரமனின் வழி திகழ் உயர்
கோத்திரனே குருவானவனே(2)
பாவியர் எங்கள் பாவவினை நீக்கி
உன்னத அருள் மழை பொழிந்திடுவாய்- உன்னத

மரியன்னை மகனை திருக்கர‌ம் ஏந்தும்
அருந்த‌வ‌ முனிவ‌னே காவ‌ல‌னே(2)
உள்ள‌ங்க‌ள் உருகி வேண்டிடும் எங்க‌ளின்
குறைக‌ளை நீக்க‌ அருள் பொழிவாய்- குறைக‌ளை

Monday, September 29, 2008

நம்புங்கள் ஜெபியுங்கள்

நம்புங்கள் ஜெபியுங்கள்
நல்லது நடக்கும்

துன்பங்களோ துயரங்களோ
சோதனையோ வேதனையோ(2)
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்(2)

மனச்சுமையோ பாரங்களோ
உடற்பிணியோ ஊனங்களோ(2)
பதுவைப் புனிதர் பரிந்துரப்பார்
எல்லாம் வல்லவர் நலம் தருவார்(2)

வறியவரோ சிறியவரோ
முதியோரோ இளையோரோ(2)
பதுவைப் புனிதர் பரிந்துரப்பார்
எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்(2)

ஓ பரிசுத்த ஆவியே

ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செகின்றேன்

என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னைத் தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறிப்
பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி எனை நடத்தும் ஓ....

மார்கழியில் உதித்த

மார்கழியில் உதித்த மன்னவனே உன்
மகிமையைத் துறந்து மண்ணகம் வந்தாய்
மனிதத்தை இழந்த இம்மண்ணில் நீ
மனுவாய் மலர்ந்து விந்தையுமானாய்

வருந்தியே உழைத்தும் வறியவரானோர்
உண்மையில் நடந்தும் ஊர்பழி சுமந்தோர்
அன்புக்கு பணிந்து அவமானம் அடைந்தோர்
அவனியை மாற்ற அடி உதை ஏற்றோர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

புனிதத்தில் வாழ்ந்து மனிதத்தை மறந்தோர்
செல்வத்தில் திளைத்து செருக்குடன் வாழ்ந்தோர்
அரியணை ஏறி அடக்கியே ஆள்வோர்
அணு ஆயுதத்தால் அகிலத்தை அழிப்போர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

நமக்காய் ஒரு குழந்தை

நமக்காய் ஒரு குழந்தை- இந்த
நானிலம் தவழ்ந்தது
நலிந்த நிலை மாறும் என்னும்
நம்பிக்கை மலர்ந்தது
ஆராரோ கண்ணுறங்கு உந்தன் ஊரேதோ கண்ணுறங்கு
விண்ணகமோ மண்ணகமோ இல்லை
இரண்டும் உந்தன் பிறந்தகமோ

வானின் தூதர்களே இன்று
வாழ்த்து பாடுங்களேன்
விண்ணகத்தில் என்றும் மகிமைதான்- ஆனால்
மண்ணகத்தில் அமைதி எங்கே
மாடடை குடிலில் பிறந்தவனே இந்த
மானிடர் நடுவில் பிறந்தாலென்ன
‌ஆடுகளே மாடுகளே நீங்கள்
மாந்தரிலும் சிறந்தவரே

மாந்தர் மைந்தர்கள் யாம்- எங்கள்
வாழ்க்கை எண்ணுகின்றோம்
மனித மாண்பு என்னவென்று- முற்றும்
மறந்த கூட்டம் உண்டு இங்கு
மனிதனாய் பிறந்த இறைமகனே- எங்கள்
மான்பினை எமக்கு கூறாயோ
வறுமை நோய் பிளவுகள்- இனி
வாராதிருக்கச் செய்வாயோ

பூத்தது பார் புதுப்பொழுது

பூத்தது பார் புதுப்பொழுது பூமகன் வரவினிலே- இதை
பூமி எங்கும் முழங்கிடவே புறப்படு இறைகுலமே- நம்
இயேசுவின் பிறப்பினிலே புது வாழ்வும் மலர்ந்திடுமே
இனிஎல்லான் நலம்தானே பல வளங்களும் பெருகிடுமே
லல்லல்லா........

இறைமகன் யேசு பிறந்தார்- ஏழை
எளியவர் மகிழ்வு கண்டார்
மாபரன் இன்று பிறந்தார்- நம்
பாவங்கள் போக்க வந்தார்
இருளை நீக்க வந்தார்- அருள்
ஒளியை ஏற்ற விளைந்தார்
விண்ணும் மண்ணும் இணைய- அதில்
இறைவன் புனிதம் கமழ
‌பாலன் இயேசு நம் மனங்களில்
சிரிப்பார் மகிழ்வாய் மனமே

அன்புருவானவர் வந்தார்- மண்ணில்
மனிதனாகப் பிறந்தார்
அமைதியின் தூதன் பிறந்தார்- நம்
அகமதில் நிறைவு தந்தார்
பாசம் பரிவு கொண்டார்- நம்
பாவம் யாவும் சுமந்தார்
நம்மில் ஒருவரானார்- நம்
இன்பம் துன்பம் பகிர்ந்தார்
பாலன் இயேசு நம் மனங்களில்
சிரிப்பார் மகிழ்வாய் மனமே

புத்தம் புதிய மலரே

புத்தம் புதிய மலரே இந்த
புவியில் உதித்த நிலவே
புதிய உலகின் விடிவே எங்கள்
இதயம் தேடும் மகிழ்வே(2)
ஆராரோ ஆரிரரோ ஆரிரராரோ(2)

என்றும் வாழும் இறைமகனே உலகில் வந்தாயே
இன்று எங்கள் உடன் பிறப்பாய் மாறிவிட்டாயே(2)
கண்ணின் மணியே கனியமுதே கண்வளராயோ(2)
அன்பின் மகிமை உணர்ந்த எம்மை அன்பில் இணைப்பாயோ
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம்
மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2)

ஈழவானில் எழும் கதிரே எங்கள் நம்பிக்கையே
தாழ்த்தப்பட்டோர் தவித்து நிற்போர் வாழ்த்தும் உன் வரவே(2)
துன்ப துயரம் துடைக்க வந்த கடவுளின் கரமே(2)
உளமகிழ்வே இகம் முழங்கும் இன்னிசை சுரமே
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம்
மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2)

பெத்லகேம் ஊருக்கு


பெத்லகேம் ஊருக்குச் சென்றிடுவோம்- அந்த
பாலனைக் கண்டிடுவோம்
பேரின்பம் அனைத்தும் குழந்தை வடிவில்
ஒளிரும் காட்சியைக் கண்டிடுவோம்- பெத்லகேம்

உண்மை ஒளியாய் உதித்ததே
வேற்றுமை அகற்றப் பிறந்ததே
இறைமை வடிவைக் கொணர்ந்ததே-2
மாமரியின் நல்மகனாய்
மனித உரவை எடுத்ததே-2

இருண்ட உலகை மீட்கவே
மருண்ட மனதை தேற்றவே
உலகின் ஒளியாய் பிறந்தாரே-2
உள்ளமதை கொள்ளை கொள்ளும்
குழந்தை வடிவில் உதித்தாரே-2

உள்ளங்கள் ஒன்று சேரவே
உரிமைகள் என்றும் நிலைக்கவே
உன்னத தேவன் உதித்தாரே-2
ஊனுடலில் உருவெடுத்து
உண்மையை நாட்டிட பிறந்தாரே-2

பெத்லகேம் நகரிலே

பெத்லகேம் நகரிலே பூபாள ராகம் ஒன்று கேட்குதா இங்கு கேட்குதா
இடையர்கள் வியந்திட வானதூதர் பாடும் கானம் கேட்குதா உனக்கு கேட்குதா
கனவான காலங்கள் நனவாகிட பாவங்கள் சாபங்கள் மறைந்தோடிட‌
இறைமகனும் பிறந்துவிட்டார் வாருங்களே பாருங்களே

வார்த்தை வடிவிலே தந்தையோடு இருந்தவர் -தூய
‌ஆவியாலே மனிதன் ஆனாரே
மழலை உருவிலே நம் மன்னன் வந்தாரே -அன்னை
கன்னிமரி மைந்தன் ஆனாரே(2)
இடையர்களும் பாலகனை கண்டு களிக்கின்றார்
வேந்தர் மூவர் வான்மலரை வணங்கி மகிழ்கின்றார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்

மனிதன் வாழவே ஆதி சாபம் நீங்கவே- ஏழை
அடிமைக் கோலம் பூண்டு வந்தாரே
தந்தை திருவுளம் ஏற்று தம்மைத் தாழ்த்தியே- இந்த
‌தரணி மீது மழலை ஆனாரே(2)
மாந்தரெல்லாம் வாழ்வு பெற மீட்பர் பிறந்துள்ளார்
மனித நேயம் மலர்ந்திடவே மன்னன் பிறந்துள்ளார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்

கன்னி ஈன்ற செல்வமே

கன்னி ஈன்ற செல்வமே இம்
மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே
எம்பொன்னே தேனே இன்பமே
எண்ண வேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததே! கன்னி

எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் காக்கும் நாதன் நீ
சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தையே

வல்ல தேவன் வார்த்தை நீ
வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னைத் துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்?

இன்று பிறந்த நாள்

வார்த்தை மனுவுருவானார்
நம்மிடையே குடிகொண்டார்
கீதங்கள் இசைக்கட்டும் ஆ.....
நாதங்கள் முழங்கட்டும் ஆ....
நேசங்கள் மலரட்டும்

இன்று பிறந்த நாள் வாந்த்துக்கள்
இன்று மலர்ந்த நாள் மண்ணிலே
அன்பின் குழந்தை இயேசுவே
உந்தன் மழலை மொழி கேட்கவே
எந்தன் மனமும் தினம் ஏங்குதே
இன்று பிறந்த நாள் வாந்த்துக்கள்
இன்று மலர்ந்த நாள் மண்ணிலே
HAPPY CHRISTMAS HAPPY CHRISTMAS
MERRY CHEISTMAS MERRY CHRISTMAS

ஒரு விண் தெய்வ‌ம் ந‌ம்மோடு ம‌ண் மீதிலே
ம‌ழ‌லையாய் ம‌ல‌ர்ந்த‌தே
அந்த‌ விண் வார்த்தை ந‌ம் வாழ்வில் இந்நாளிலே
விய‌லாய் புல‌ர்ந்த‌தே
இனி வேற்றுமை ம‌றைய‌ட்டும்
எங்கும் வேத‌னை தீர‌ட்டும்
வைய‌ம் ம‌கிழும் வான் ப‌டை போற்றும் வான‌தேவ‌ன் வ‌ர‌வில் -ந‌ல்ல
‌இத‌ய‌ம் நிறையும் உத‌ய‌ம் ம‌ல‌ரும் தேவ‌ மைந்த‌ன் உற‌வில்‍- இன்று

ஆரிராரிரோ

ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்கு- என்
அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு

அழியாத ஆன்மாவின் விருந்தாகவே
என்னில் எழுந்தே நீ வா- உன்
ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே
என்னில் இசை பாடவா
கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்
தெய்வமே செல்வமே
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ

அழகான ஆன்மாவில் வருகின்றவர்
என்னை உருவாக்கவா- நல்
அணையாத தீபமாய் திகழ்கின்றவா
ஆன்ம ஒளி ஏற்றவா
சிறு திரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்
தெய்வமே செல்வமே!
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ

ஞானம் நிறை

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய்(2)
பலிப்பீடமுமாய் அலங்கரித்தாயே(2)

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உனையே பரமன்
தாய் உதரம் நீ தரித்திடவே(2)
தனதோர் அமலன் தனமெனக் கொண்டார்(2)

வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே(2)
வானோர் துதிக்கும் இறைவியே வாழி(2)

தாரகை சூடும்

தாரகை சூடும் மாமரியே
தாளினைப் பணிந்தோம் காத்திடுவாய்
தாரகை சூடும் மாமரியே

தேவனை உலகுக்கு அளித்தவளே
தேடிய துணையைக் கொடுப்பவனே(2)
வாடிய மகவை அணைப்பவளே-2
வாழிய ஞானிய காவலியே

தென்னக கன்னிக் கடலலையும்
பன்னெழில் இமய மாமலையும்
மின்னெழில் எம் தாயகமும்-3

தாவீதின் குல மலரே

தாவீதின் குல மலரே- ஒளி
தாங்கிடும் அகல் விளக்கே- என்னைக்
காத்திடும் ஆரணங்கே- அருள்
சுரந்திடும் தேன் சுனையே

இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்
கறை சிறிதில்லாக் காத்திருந்தார்
மறையவர் புகழும் மாமணியே
கரை சேர்ப்பதுவே உன் பணியே- தாவீதின்

மக்களின் மனமே மகிழ்ந்திடவே
நற்கனி சுதனை எமக்களித்தாய்
கற்றவர் மற்றவர் யாவருமே
பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா- தாவீதின்

கலங்கரை தீபமே

கலங்கரை தீபமே
கலங்களின் தாரகையே
துலங்கிடும் மணியே
கலங்குவோர்க் கதியே
காத்திடுவாய் தாயே

மாதர்களின் மாதிரியே
மாயிருளில் ஒளி தாரகையே
மாதரசியே மனவொளி தாராய்
மாசு அகலச் செய்வாய்

தாயெனவே தாவி வந்தோம்
சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி
கூவிடும் குரல் கேளாய்

உம்மைத் தேடி வந்தேன்

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள் தாருமம்மா-2

முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் மீது தவித்த கப்பலை காத்தாய்-2
பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்ததாய்(2)- உம்மை

கடல் நீரும் போல உன் கோயில் காண‌
அலையாக வந்து உன் பாதம் சேரும்-2
உலகாளும் தாயே உனை பாடி வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா(2)- உம்மை

மலடான மங்கை மடிமீது மகனை
மகிழ்ந்தாடச் செய்த மகிமையின் தாயே-2
குருடானேன் உன்னை கரங்கூப்பி நின்றால்
அருளாகி எனக்கு ஒளி தாரும் தாயே(2)- உம்மை

ஆரோக்கிய மாதாவே

ஆரோக்கிய மாதாவே- உமது
புகழ் பாடி மகிழ்ந்திடுவோம்
எந்நாளும் பாடித் துதித்திடுவோம்

அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே
பலவித கலைகளும் பாரினில் சிறந்திட‌
அனைவருக்கும் துணை புரிந்தாயே-2

தேன் கமழும் சோலை தேர்ந்து விளங்கும்
வேளாங்கன்னியில் அமர்ந்தாயே
வானகமும் இந்த வையகமும்
அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே-2

அன்னைக்கு கரம்

அன்னைக்கு கரம் குவிப்போம்- அவள்
அன்பைப் பாடிடுவோம் -அவள்
அன்பைப் பாடிடுவோம்

கன்னிமையில் இறைவன் உருகொடுத்தார் -அந்த
‌முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள்
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தாள்-2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

பாவமதால் மனிதன் அருளிழந்தான்- அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டார்
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார்-2
பாரினில் அவர் புகழ் பாடிடுவோம்

அழகின் முழுமையே

அழகின் முழுமையே தாயே
அலகையின் தலை மிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே
அமலனை எனக்களித்தாயே

இருளை சூழ்ந்திடும் போதே
உதயத் தாரகை போல‌
அருளேநிறைந்த மாமரியே
அருள் வழி காட்டிடுவாயே

அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனை பின் செல்வோம்
உன்னைத் துணையாய் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்

Saturday, September 27, 2008

அன்னை மாமரி

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரை தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம்

எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய்-2
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய் மரியே எம்மை
அரவணைத்திக் காப்பாய் நீயே

அண்ணல் இயேசு அன்பின் வழியைக் கற்றுத் தந்த உன்
அன்பு மிகு ஆதரவில் அச்சம் நீங்குதே-2
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய் மரியே எம்மை
அரவணைத்திக் காப்பாய் நீயே

அம்மா எங்கள் தாயே

அம்மா எங்கள் தாயே உனைப் பாடாத நாவில்லையே
அருகே நீயும் வரவே உனைத் தேடாத நாளில்லையே
அந்த மேலோக மண்ணிலா தாயாக என்னிலா பூலோகம் வந்த வெண்ணிலா
என்னைத் தேடி அம்மா

ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே
கான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே
ஏந்தி வந்த சுமையெல்லாம் கனவாகுதே
சுகராகம் பாட எங்கள் மனம் தேடுதே
மரியே உன்னை அடைந்தோம் நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே- அம்மா

கோடான கோடி மக்கள் குறை தீரவே
தின‌ந்தோறும் தேடி வ‌ரும் தாய் நீய‌ல்லோ
கூடிவ‌ந்து திருப்பாத‌ம் ச‌ர‌ணாவ‌தால்
ஆன‌ந்த‌ கான‌மிங்கு அலைபாயுதே
ம‌ல‌ரே ம‌ல‌ரும் நில‌வே உள்ள‌ம் ம‌கிழ்ந்தோம் உன்னிலே- அம்மா

அலையொளிர் அருணனை

அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ

வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்

அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌
வல்ல உன் மகனிடம் கேள்

Wednesday, September 17, 2008

நெஞ்சில் சுரக்கும்

நெஞ்சில் சுரக்கும் நன்று சுரங்கள்
நானிலமெங்கும் நான் பாட
‌நந்தவனத்தில் உண்டு களிக்கும்
வண்டுகள் பாடும் பண் போல
‌விண்ணில் தெறித்தும் மின்னல்களாய்
மண்ணில் முளைத்திடும் நல் விதைகள்
மின்னித்தெறித்திடும் மின்னல்களாய்
கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள்
நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன்
நானிலமெங்கும் உன் புகழ் சொல்வேன்

தோளழுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்க‌
தோழமையில் பூமியிலே புதுவுலகம் படைக்க
‌நெஞ்சுக்குள்ளே புரட்சிக் கனலை யார் வைத்தது
அஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும்
எல்லாமே நீ தந்தது-2

எல்லையில்லா உலகிலே எனக்கு உயிர் தந்தாய்
எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய்
ஈரமுள்ள உறவுகளை யார் தந்தது
இறையரசின் நினைவுகளும் யார் தந்தது
புதுயுகத்தின் கனவுகள்
புன்னகைக்கும் உறவுகள்
எல்லாமே நீ தந்தத-2

காற்றே முகிலே

காற்றே முகிலே பாடுங்களே
இயேசுவின் புகழை போற்றுங்களே-2
உண்மையின் ஒளியிது அன்பெனும் சரமிது
பாசத் தோட்டத்தின் பூவே- மனமே மகிழ்வே-2

சுயநல வாழ்வில் அமைதியுண்டோ
மன்னிப்பின் மகிழ்ச்சிக்கு ஈடேதும் உண்டோ(2)
வாழ்வை செபமாய் மாற்றிட
‌பாசப் பாடம் பயின்றிட‌(2)
இனிய உதயங்கள் இனியெங்கும் எழுந்திட
‌அமைதிப் புறாவே சொல்லித்தா(2)

இயற்கையின் மேமைக்கு ஈடேதும் உண்டோ
அன்பிற்க்குள் ஆணவம் ஜெயித்ததுண்டோ(2)
வறுமையில் வளமை கண்டிட‌
வரங்கள் ஆயிரம் பொழிந்திட‌(2)
அற்புத நாயகா ஆனந்த கீர்த்தனா
ஏழ்மையின் காதலா எழுந்து வா

காலம் போற்றும்

காலம் போற்றும் கருணை தெய்வமே உன் தயவினால்
ஞானம் தாரும் உன்னைப் பாடவே

வான் கூறும் வண்ணக் கவிதை
பூமி சிந்தும் புன்னகை கீதம்
அத்தனையும் சொல்வதுன் புகழல்லவா
நீ தந்த வாழ்வைப் பெற்று
வாழ்கின்ற உயிரினங்கள்
அனைத்திலும் இருப்பது நீயல்லவா
கண்ணின் மணி போல் காக்கும் தெய்வமே
உன் புகழ் பாட ஞானம் தாருமே
பணி வாழ்வில் பண் பாடும் துருத்தூதனாய்
எனை ஏற்றிட திருவடிகளில் சரணாகின்றேன்

உன் கனவை நெஞ்சில் தாங்கி
என் ஜீவன் வாழும் போது
உலகினர் காண்பதுன் அருளல்லவா
நான் உன்னில் இணைய வேண்டும்
நீ என்னில் நிறைய வேண்டும்
உணர்வோடு கலப்பது அழகல்லவா
தாய் தந்தை யாவும் இறைவனே
என் பெயரை உந்தன் கையில் தாங்குமே
நீ தந்த புவி வாழ்வில் துருத்தூதனாய்
எனை ஏற்றிட திருவடிகளில் சரணாகின்றேன்

ஒளியாய் மழையாய்

ஒளியாய் மழையாய் நீ பொழிந்தால்
வளர்வேன் செழித்தெ உயர்ந்திடுவேன்(2)
கனிவாய் பரிவாய் நீ அணைத்தால்
இனிதாய் புதிதாய் மலர்ந்திடுவேன்
இறைவா முதல்வா வழிகாட்டு- என்
இதயம் உன் இல்லம் விளக்கேற்று -ஒளியாய்

துணையாய் அருகே நீ வ‌ந்தால் எந்தத்
தொலைவும் எளிதாய் க‌ட‌ந்திடுவேன்(2)
சுனையென‌ அன்பு சுர‌ந்து வ‌ந்தால்- நான்
சுக‌மாய் ம‌கிழ்வாய் ந‌ட‌ந்திடுவேன்- இறைவா

ஆற்ற‌லும் அருளும் நீ த‌ந்தால்
ஓராயிர‌ம் ப‌ணிக‌ள் ஆற்றிடுவேன்(2)
தேற்றிட‌ நீயும் அருகிருந்தால்- எந்த‌த்
துய‌ர‌ச் சுமையும் தாங்கிடுவேன்- இறைவா

ஒரு போதும் உனை

ஒரு போதும் உனைப் பிரியா
நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல் கூட எரிந்தாலும்
உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே
நீங்காத நினைவாக வா இறைவா

உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய்
ஏன் என்னை நீ தெரிந்தாய்
என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் தாய்
உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்
உன்னோ நான் வாழுவேன்

நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்
என்னுள்ளே வாழும் தெய்வம்
என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசுவே என்னுள்ளம் நின்றாய் நிதம்
என் பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்

எந்தன் இதய

எந்தன் இதய இனிய வேந்தன்
என்னில் வந்து தங்கும் நேரம்
வந்ததும் வசந்தம் வீசுமே
வசந்தத்தில் வாழ்வுண்டு வாழ்வில் அவனுண்டு
என்னில் அவனும் அவனில் நானும் என்றும் ஒன்றுதானே

வாழ்க்கை மூச்சு நின்றுவிடும் அன்றே
வீசிடும் காற்று நீ எனில் இல்லை என்றால்
ஓடோடி வந்தேன் உனை என்னில் ஏற்க
‌ஒன்றாகும் நேரம் நான் உன்னைப் பாட
‌ஆ..ஆ..ஆ..ஆ.. அன்பு தெய்வமே அருள் தாருமே
நீ மீட்டும் வீணையும் நான் பாடும் பாடலும்
இறைகடலில் சங்கமிக்கும் இதய வேந்தனே

நிம்ம‌தி நீயாய் இருக்கின்ற‌ போது
நித‌மும் நீ என்னில் த‌ங்கிட‌ வேண்டும்
சிந்த‌னைக‌ள் யாவும் சீர்ப‌டுத்த‌ வேண்டும்
சொல் செய‌ல் யாவும் தூய்மையாக‌ வேண்டும்
ஆ..ஆ..ஆ..ஆ..அன்பு தெய்வ‌மே அருள் தாருமே
என் வ‌றுமை எனும் இருள் உன் வ‌ள‌மை ஒளியிலே
அக‌ன்றிட‌ வேண்டும் என் அன்பு தெய்வ‌மே

Tuesday, September 9, 2008

என் மன்னவா

என் மன்னவா என்னில் இறங்கி வா(2)
தினமும் எந்தன் உணவாய் என்றும்
என்னில் மகிழ வா
ஆன்ம ஜோதியே என்றும்
என்னில் மகிழ வா

பாட்டிசைத்து பாட வந்தேன்
உந்தன் மனம் மகிழுதே
காலமெல்லாம் காத்திருந்தேன்
உந்தன் சொந்தம் தேடுதே
என் உயிரே என் உறவே
எந்தன் உள்ளம் எழுந்து வா
ஆ....ஆ.... என் உயிரே
தினம் தினம் என்னில் வா
என்னில் வாழ வா
உயிரில் கலந்து வா -என் மன்னவா

நெஞ்சமெனும் கோவிலிலே
தெய்வமாய் எழுந்து வா
தஞ்சமென்று ஓடி வந்தேன்
நலம் தந்து அணைக்க வா
அன்புருவே ஆர‌முதே
அன்ப‌ர் எம்மில் எழுந்து வா
ஆ....ஆ... அன்புருவே
தினம் தினம் என்னில் வா
என்னில் வாழ வா
உயிரில் கலந்து வா- என் மன்னவா

Saturday, September 6, 2008

எந்தன் தேவா

எந்தன் தேவா என்னில் வாரும்
உந்தன் அன்பை என்னில் தாரும்
எந்தன் நாவு உன் நினைவாக‌
என்றும் உம்மை எண்ணிப் பாடும்- எந்தன்

இறை இயேசுவின் திவ்யப் பிரசன்னம்
எந்தன் இல்ல‌த்தில் இன்று தங்கும்
புவி மீதினில் நீதியை அருள‌
எந்த‌ன் ஆண்ட‌வ‌ர் விரைவாய் வ‌ருவார்
வான‌ வீதியில் மின்ன‌ல் தோற்ற‌ம் போல்
ராஜா வ‌ருவாரே ம‌ன‌மே காத்திரு
நீர் என்னில் வ‌ந்த‌தால் நான் உம்மில் தான்- எந்த‌ன்

என் இதயம் உன்

என் இதயம் உன் ஆலயமே
என்னில் குடிகொள்ள வா ஓ தேவா
என்னில் உயிரூட்டவா
சரணம் தேவா சரணம் தேவா......(4)

பாவம் அகற்றி உன் குடிலாக என்னை மாற்றும் ஐயா
உன் உருவம் என் இதயத்திலே
நிரந்தரம் பதிக்குமையா ஓ தேவா.....(2)

நீருக்காக ஏங்கும் என் நிலத்தைப் பாருமையா
வாழ்வுதரும் உன் நீரளித்து வாழ்வினை
செழிக்க வைப்பீர்- ஓ தேவா.....(2)

உறவாடும் நேரமிது

உறவாடும் நேரமிது உனைக் காணும் காலமிது
என் இயேசுவே நாளுமே
இதயம் வாருமே

மலராகினாலும் சருகாகினாலும்
எனையே உனதாக்கினாய்
மலையாகினாலும் மடுவாகினாலும்
நிலவே எனை நோக்கினாய்
அரணாய் என்னை நீ சூழ்ந்து நின்றாய்
தாயின் கருவில் எனைத் தேர்ந்த தெய்வம்
உன்னில் மகிழ்கின்றேன்

பதராக என்னை ஊர் பார்க்கும்போது
பயிராக நீ மாற்றினாய்
பகையோடு என்னைப் பிரிந்தாளும் போது
அன்பே எனை நோக்கினாய்
துரும்பான என்னை விரும்பினேன் என்றாய்
என் வாழ்வின் பொருளாய் நீயாகும்போது
எதையும் தாங்குவேன்

உணவாக எழும்

உணவாக எழும் தெய்வமே
உறவாட எனில் வாருமே
தனைத் தந்த தெய்வம்
எனை ஆள வந்தால்
தனிமைகள் பறந்தோடுமே
தனியின்பம் எனை சூழுமே ஓ....

பிரிந்ததால் வீழ்ந்திட்ட மானிடத்தை
இணைத்திட தோன்றிய தேனமுதே
பகைமையால் வளர்ந்திட்ட பிளவுகளை
போக்கிட மலர்ந்திட்ட வான் கவியே
திருவுணவும் திருப்பானமும்
உனதுறவை எடுத்துச்சொல்லும்(2)
ஒரு பந்தி சம பந்தி
எந்நாளும் மலரச் செய்யும் ஆ.....

காலமெல்லாம் திருவுணவில் தனை வழங்கும்
கரையில்லா உனதன்பை நான் மறவேன்
கலங்கிடும் வேளையில் கை விடாமல்
கரம்பிடிக்கும் என் தேவா உனைப்பிரியேன்
காத்திருக்கும் கண்களுக்கு
காட்சியாக நீ வருவாய்(2)
கனிவுடனே தங்கிடுவாய்
ஏழை என் நெஞ்சினிலே

இறைவனின் உடலிது

இறைவனின் உடலிது
அவரது இரத்தமிது
அவர் நினைவாய் நாம் செய்யும்
மீட்பின் சின்னமிது- நம்
வாழ்வின் உணவிது

அப்பத்தை உண்டு கிண்ணத்தைப் பருகும்
வேளைகள் எல்லாம் விசுவாசமே
ஆண்டவர் வருகின்ற நாள்வரை நாமும்
மரணத்தின் அறிக்கை செய்வோமே
ஆதலினால் தகுதியுடன்
அப்பத்தை உண்டிடுவோம்- நாம்
கிண்ணத்தைப் பருகிடுவோம்

பிளவுகள் அகற்றி பிரிவினை மறந்து
விருந்தினை ஒன்றாய்க் கூடிடுவோம்
உறவினை வளர்க்க உள்ளத்தைப் பகிர்ந்து
விருந்தினை உலகினில் படைத்திடுவோம்
தினந்தோறும் திருவிருந்தில்
இறைவனில் கலந்திடுவோம்- இறை
நிழலாய் வாழ்ந்திடுவோம்

அன்பு தேவன்

அன்பு தேவன் சொன்ன வாக்கு
அழிவு காண்பதில்லை என்று
வாழும் மாந்தர் காணும் பாதை
புதிய உலகம் சேருமே
தன்னைத் தந்த தலைவன் அவரை
உறவு வாழ்வில் சுவைத்து மகிழ்ந்தால்
நெஞ்ச நிறைவு தந்து தேற்றும்
இனிய அமைதி தோன்றுமே
கண்டுகொண்டோம் இயேசுவே உம்மையே
காலமெல்லாம் காக்கும் உந்தன் அருளையே- அன்புதேவன்

திராட்சைக்கொடி நானே என்று தன்னை அளித்தார்
நீங்கள் அதன் கிளைகள் என்று நம்மை அழைத்தார்
நல்லமேய்ப்பன் நானே என்று தன்னையே தந்தார்
நீங்கள் என் மந்தை என்று நம்மை இணைத்தார்
நண்பனுக்காய் உயிர்தருதல் மேலான அன்பு
அன்புக்கு இலக்கணமே இயேசுவே
உறவின் பாலம் இயேசுவே உதய கீதம் இயேசுவே
எல்லார்க்கும் எல்லாமே இயேசுவே -அன்புதேவன்

வானில் உணவு நானே என்று தன்னைத் தந்தாரே
என் நினைவில் வாழ்க என்று நம்மை அழைத்தார்
உலகின் ஒளி நானே என்று தீபம் ஆனாரே
தீப ஒளியை நாடு என்று நம்மைப் பணித்தார்
உலகத்தின் இறுதி வரை உன்னோடி வாழ்வேன்
வாழ்வுக்கு ஆதாயம் இயேசுவே
தியாக தீபம் இயேசுவே வாழ்வின் உணவு இயேசுவே
எல்லார்க்கும் எல்லாமே இயேசுவே- அன்புதேவன்

Friday, September 5, 2008

அதிசய‌ங்கள் செய்கிறவர்

அதிசங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்

தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம்(2)
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய்
மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)
புயல் காற்றைத் தம் ஆணையாலே
அடக்கினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்

அன்பனே விரைவில்

அன்பனே விரைவில் வா- உன்
அடியேனைத் தேற்றவா
அன்பனே விரைவில் வா

பாவச்சுமையால் பதறுகிறேன்
பாதை அறியாது வருந்துகிறேன்
பாதை காட்டிடும் உன்னையே நான்
பாதம் பணிந்து வேண்டுகிறேன்

இருளே வாழ்வில் பார்க்கின்றேன்
இதயம் நொந்து அழுகின்றேன்
ஒளியாய் விளங்கும் உன்னையே நான்
வழியாய் ஏற்று கொள்ளுகிறேன்

Tuesday, September 2, 2008

வாழ்வைப் பலியாய்

வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்
என்னையே ஏற்றிடுவாய்
முழுமனதுடனே கையளிக்கின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய்

கோதுமை மணியும் திராட்சை கனியும்
புது உரு பெறுவது போல்(2)
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர் தருவோம்

நான் வாழப் பிறரும் பிறர் வாழ நானும்
தேவை என்றுணர்ந்தேன்(2)
சமத்துவ சகோதர நோக்குடனே
புது யுகம் காண்போம் அகத்தினிலே

பொன்னும் பொருளும்

பொன்னும் பொருளிமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்(2)
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயேயெனச் சொல்லிவந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ நீயோ
என்னை ஆளும் மன்னவனன்றோ

நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ- என்
நிம்மதி இழந்து நின்றேன்
வ‌ள‌மில்லா வாழ்வினில் வ‌ச‌ந்த‌ங்க‌ள் தேடி நான்
அள‌வில்லா பாவ‌ம் செய்தேன்
த‌ன‌து இன்னுயிரை ப‌லியென‌த் த‌ந்த‌வ‌ரே
உன‌க்கு நான் எதைய‌ளிப்பேன்- இன்று
உன‌க்கு நான் எனைய‌ளித்தேன்

வ‌றுமையும் ஏழ்மையும் ப‌சியும் பிணியும்
ஒழிந்திட‌ உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அற‌மும்
நிலைத்திட‌ ப‌ணி செய்வேன்
த‌ன‌து இன்னுயிரை ப‌லியென‌த் த‌ந்த‌வ‌ரே
உன‌க்கு நான் எதைய‌ளிப்பேன் இன்று
உன‌க்கு நான் எனைய‌ளித்தேன்

பலியென எனை

பலியென எனைத் தருவேன்- உம்
பலியினில் எனை இணைத்தேன்
பகிர்தலில் நாளும் வளர‌
பணிந்தே எனைத் தருவேன்

வாழ்வது நானல்ல எந்தன் இயேசுவே வாழ்கின்றீர்
எந்தன் உடல் பொருள் ஆவி எல்லாம்
உமக்கே தருகின்றேன்-2
என்னையே ஏற்று வாழ‌
உமதருள் கேட்கின்றேன்-2

திராட்சை கொடி என்றீர்-அதன்
கிளைகள் நீர் என்றீர்
எனக்குள் இருப்போரெல்லாம்
என்றுமே வாழ்வாரென்றீர்-2
பிறரையே ஏற்று வாழ‌
உம் வரம் கேட்கின்றேன்-2

தருகின்ற நேரம்

தருகின்ற நேரம் எம்மைத்
தருகின்ற நேரம்
காணிக்கையாக உம்மில் நாங்கள்
இணைகின்ற நேரம்(2)

உயிரும் உடலும் உறவும் உணர்வும்
வாழ்வும் வளமும் வசந்தத்தின் நிறைவும்(2)
உந்தன் பெருங்கொடையே- நீ
எமக்காய் தந்தவையே
உந்தன் படைப்புக்களே- நீர்
எமக்காய் தந்தவையே
இன்று உம்மில் இணைய வருகின்றோம்
உமக்காய் எம்மைத் தருகின்றோம்- த‌ருகின்ற‌

கொடுப்பதன் இன்பம்

கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை
தந்தேன் என்னையே அன்புடனே
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன்(2)

தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வை
தந்தேன் என்னையே அன்புடனே(2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன்-2

அப்பமும் ரசமும் தருவதின் வழியே
தந்தேன் என்னையே அன்புடனே(2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன்-2

Monday, September 1, 2008

காணிக்கை தரும் நேரம்

காணிக்கை தரும் நேரம்- நான்
என் ம‌ன‌ம் த‌ருகின்றேன்-2
ஏற்ற‌ருளும் தெய்வ‌மே
எளிய‌வ‌ன் த‌ருகின்ற‌ காணிக்கையை-2

ப‌டைப்புக்க‌ள் ப‌ல‌வாகினும்
ப‌ர‌ம‌ன் உம‌க்கே சொந்த‌ம் -2-அதில்
ம‌ல‌ராகும் என் ம‌ன‌ம் உன்னிட‌த்திலே-2
ம‌ண‌ம் காண‌ ஏற்றிடுமே-2

பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளெல்லாம்
த‌லைவ‌ன் உம‌த‌ன்றோ-2- என்றும்
உம‌த‌ன்புப் ப‌லியினில் என் வாழ்வினை-2
ப‌லியாக‌ ஏற்றிடுமே-2

காணிக்கை தந்தோம்

காணிக்கை தந்தோம் தேவா-எம்மை
கனிவோடு கரம் தாங்கி ஏற்பாய்-2
எம் வாழ்விலே உம் கனவை வாழ‌-2
அருளாகி நிறைவாக தினந்தோறும் தாரும்

மனுவாக வந்தாய் மண் வாழ்விலே
நலமான இறையாட்சியே-2
மனித நலம் காக்க மாண்போடு வாழ‌-2
எம் உயர்வையும் பிறர் உயர்வையும்
உம் பாதம் வைத்தோம்(2)
இறைவா எங்கள் தலைவா
நிறைவாய் வரங்கள் தருவாய்-2

நலமாக எந்நாளும் உருவாகவே
நலம் காணும் நல்வாழ்விலே-2
சாதி சமயம் நீங்க சம வாழ்வு ஓங்க‌-2
எம் உணர்வையும் பிறர் உணர்வையும்
உம் பாதம் வைத்தோம்-2
இறைவா எங்கள் தலைவா
நிறைவாய் வரங்கள் தருவாய்(2)

காணிக்கை காணிக்கை

காணிக்கை காணிக்கை
காணிக்கையாக வருகின்றோம்
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்
என்னையும் பலியினில் சேர்த்திடுவாய்

கோதுமை மணியும் திராட்சை இரசமும்
உம்மிடம் கொண்டு வந்தோம்
நேரிய உழைப்பும் உழைப்பின் பயனும்
உமக்கே கையளித்தோம்
இன்றைய பொழுதில் செய்பவை அனைத்தும்
உம்மிடம் படைக்க வந்தோம்
எம் செயலனைத்தும் உம் செயலாக‌
மாற்றிட கூடி வந்தோம் - காணிக்கை