தெய்வம் நம்மை தேடி வருகின்றார்
தினமும் உணவாய்த் தம்மையே தருகின்றார்
ஒன்றாய் இணைந்து நாமும் வாழ
ஓருடல் பகிர்ந்து உள்ளம் உறைந்திடுவார் -தெய்வம்
மண்ணில் விழுந்த விதையாக
மடிந்தார் இயேசு உலகுக்காக
தன்னை இழந்தார் வையம் வாழ
தன்னலம் மறந்து நாமும் வாழ
பிறர் வாழ்ந்திட கரம் கொடுப்போம்
பலம் தந்து பாதையாவார்(2)- தெய்வம்
கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வம்
ஒன்றாய் வாழும் மனங்கள் தேடும்
அன்பால் அனைத்தும் கூடுமென்று
அன்பின் சிறகால் நம்மை மூடும்
மலர் மணமாய் மனம் வாழ
எழும் இயேசு தேவா வந்திடுக(2)- தெய்வம்
Wednesday, July 30, 2008
இறைவா உன் திருமுன்
இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல்
தாவி மேலே வருகின்றேன்
என் நிலை நான் சொல்கின்றேன்
உன் குழந்தை நானல்லவா
என்னை நோக்கி ஓடி வந்து என்னை காப்பாயோ
அன்பைத் தேடும்போது என் தந்தை நீயல்லவா
அமுதம் நாடும்போது என் அன்னை நீயல்லவா(2)
ஒரு குறையும் இன்றி காத்தாய்
நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்
உன்னை ஒதுக்கியே பார்த்த நானும்
இனி என்ன கைமாறு செய்வேன்-2
மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவன் நீதானய்யா
மனதில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானய்யா(2)
உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து
ஒரு நாளும் பிரியாமல் வளர்ந்து
உந்தன் மடியிலே தவழ்ந்து நானும்
இனி அப்பா தந்தாய் என்று அழப்பேன்-2
தாவி மேலே வருகின்றேன்
என் நிலை நான் சொல்கின்றேன்
உன் குழந்தை நானல்லவா
என்னை நோக்கி ஓடி வந்து என்னை காப்பாயோ
அன்பைத் தேடும்போது என் தந்தை நீயல்லவா
அமுதம் நாடும்போது என் அன்னை நீயல்லவா(2)
ஒரு குறையும் இன்றி காத்தாய்
நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்
உன்னை ஒதுக்கியே பார்த்த நானும்
இனி என்ன கைமாறு செய்வேன்-2
மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவன் நீதானய்யா
மனதில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானய்யா(2)
உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து
ஒரு நாளும் பிரியாமல் வளர்ந்து
உந்தன் மடியிலே தவழ்ந்து நானும்
இனி அப்பா தந்தாய் என்று அழப்பேன்-2
சதா சகாய
சதா சகாயத் தாய் மரியே
அம்மா உன் ஆதரவே எம் பேரு
இதோ உன் தாயிவளே
எனும் இறை மொழியே
சதா உதவும் தயை பெருகும்
அன்னை உனைத் தந்ததமா- அம்மா
கல்வாரி பலியினிலே
எம்பாவம் சுமந்தவர்க்காய்
நல் ஆறுதலாய் நின்ற தாயே
இன்றெம் துணை வாராயோ - அம்மா
அம்மா நின் பரிந்துரையே
என் தேவன் புதுமைகளால்
தண்ணீர் ரசமாய் கனிந்தது போல்
எந்தை மனம் கசியச் செய்யும்- உம்மாலே
அம்மா உன் ஆதரவே எம் பேரு
இதோ உன் தாயிவளே
எனும் இறை மொழியே
சதா உதவும் தயை பெருகும்
அன்னை உனைத் தந்ததமா- அம்மா
கல்வாரி பலியினிலே
எம்பாவம் சுமந்தவர்க்காய்
நல் ஆறுதலாய் நின்ற தாயே
இன்றெம் துணை வாராயோ - அம்மா
அம்மா நின் பரிந்துரையே
என் தேவன் புதுமைகளால்
தண்ணீர் ரசமாய் கனிந்தது போல்
எந்தை மனம் கசியச் செய்யும்- உம்மாலே
எந்தன் ஆன்மா
எந்தன் ஆன்மா ஆண்டவரை
ஏற்றி போற்றிடுதே
இந்த அடிமை என்னை அவர்
நினைந்ததனால் அந்த மீட்பரில்
நெஞ்சம் மகிழ்கின்றதே
வல்லவர் எனக்காய் பெரியன புரிந்தார்
வையகம் எனை தினம் வாழ்த்திடுமே
அருள் நிறை மரியே வாழ்க
ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள் பெரும் பேறுபெற்றீர்
வாழ்க மரியே வாழ்க
அவர் தம் பதம் பணிவோர் தலைமுறைக்கெல்லாம்
தயவருள்வார் அவர் தூயவராம்-2
அவர் தமதாற்றல் கரத்தினை நீட்டி
செறுக்கடைந்தோரை சிறகடித்தார்(2)- அவர்
வலியோரை உயர் இருக்கையின்றிறக்கி
எளியோரை மிக உயர்த்தி விட்டார்
பசித்தோரை பல நலன் கொண்டு நிரப்பி
செல்வரை வெறுங்கையறென விடுத்தார்-2
ஏற்றி போற்றிடுதே
இந்த அடிமை என்னை அவர்
நினைந்ததனால் அந்த மீட்பரில்
நெஞ்சம் மகிழ்கின்றதே
வல்லவர் எனக்காய் பெரியன புரிந்தார்
வையகம் எனை தினம் வாழ்த்திடுமே
அருள் நிறை மரியே வாழ்க
ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள் பெரும் பேறுபெற்றீர்
வாழ்க மரியே வாழ்க
அவர் தம் பதம் பணிவோர் தலைமுறைக்கெல்லாம்
தயவருள்வார் அவர் தூயவராம்-2
அவர் தமதாற்றல் கரத்தினை நீட்டி
செறுக்கடைந்தோரை சிறகடித்தார்(2)- அவர்
வலியோரை உயர் இருக்கையின்றிறக்கி
எளியோரை மிக உயர்த்தி விட்டார்
பசித்தோரை பல நலன் கொண்டு நிரப்பி
செல்வரை வெறுங்கையறென விடுத்தார்-2
Monday, July 28, 2008
வங்கக் கடலோரம்
வங்கக் கடலோரம் உந்தன் தலம் தேடி
வந்தாரை நலமாக்கும் அன்பே
ஆரோக்கியத் தாயே அம்மா
வேலை கிடைக்கும் என்று வேளைநகர் வந்து
வெருங்கையாய் சென்றாருண்டோ நல்ல
எந்தன் வேளை இன்றும் வரவில்லை
என்று சொன்ன இயேசு அன்று
உன் சொல்லில் இசைந்தாரன்றோ
உன் சொல்லில் வரம் வேண்டி வந்தோம்
காவல் கரங்கள் நீட்டி கருணை
சிரம் காட்டி கலங்காதே என்றாய் தாயே உந்தன்
அன்பை வேண்டி வந்து அல்லல்
சேர்ந்த எந்தன் வாழ்வில்
துதிப்பாடி உனைப் போற்றினோம்
தூயோனின் தூயான மாமரியே வாழ்க
வந்தாரை நலமாக்கும் அன்பே
ஆரோக்கியத் தாயே அம்மா
வேலை கிடைக்கும் என்று வேளைநகர் வந்து
வெருங்கையாய் சென்றாருண்டோ நல்ல
எந்தன் வேளை இன்றும் வரவில்லை
என்று சொன்ன இயேசு அன்று
உன் சொல்லில் இசைந்தாரன்றோ
உன் சொல்லில் வரம் வேண்டி வந்தோம்
காவல் கரங்கள் நீட்டி கருணை
சிரம் காட்டி கலங்காதே என்றாய் தாயே உந்தன்
அன்பை வேண்டி வந்து அல்லல்
சேர்ந்த எந்தன் வாழ்வில்
துதிப்பாடி உனைப் போற்றினோம்
தூயோனின் தூயான மாமரியே வாழ்க
என்ன தவம் செய்தாயோ
என்ன தவம் செய்தாயோ மரியே
என்ன தவம் செய்தாயோஎம்மான் இயேசு
உன்னை அம்மாவென்றழைக்க
பெண்களுக்குள் ஆசி நிரம்பப் பெற்றாய் எம்
கண்களுக்கு கருணையை காட்டிவிட்டார்
மங்களங்கள் பொழிந்தாய் மரியே வாழ்க-2
மண்ணுலகம் எங்கும் உந்தன் புகழ் வாழ்க(3)
மண்ணில் வந்த தேவன் உன்னில் பிறந்தார் -அவ்
விண்ணொளியின் சுடடின் மணி விளக்கே
அன்னையென்று உன்னையே அண்ணலவர் தந்தார்
இன்னல் நிறை உலகில் துணையாக நீ வர வேண்டும்(3)
என்ன தவம் செய்தாயோஎம்மான் இயேசு
உன்னை அம்மாவென்றழைக்க
பெண்களுக்குள் ஆசி நிரம்பப் பெற்றாய் எம்
கண்களுக்கு கருணையை காட்டிவிட்டார்
மங்களங்கள் பொழிந்தாய் மரியே வாழ்க-2
மண்ணுலகம் எங்கும் உந்தன் புகழ் வாழ்க(3)
மண்ணில் வந்த தேவன் உன்னில் பிறந்தார் -அவ்
விண்ணொளியின் சுடடின் மணி விளக்கே
அன்னையென்று உன்னையே அண்ணலவர் தந்தார்
இன்னல் நிறை உலகில் துணையாக நீ வர வேண்டும்(3)
சதா சகாயத் தாயே
சதா சகாயத் தாயே சகல மைந்தைர்க்குமே
இதய உணர்ச்சி ததும்பும் உனையே
தினம் நினைத்துமே
உதயத் தாரகை இருளில் நீயென
உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோர்
பாவமும் களைவாய் பரம நாயகியே
பயமும் கவலை தீர் பதுமை அன்னையும் நீர்
நயமும் பெருகும் சுனையும் நீயென
நிதம் புகழுவோம்
புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே
புனித மாமரியே
சுதனும் உனையே தாயென
அளித்தார் சிலுவை அடியிலே
பயமும் கவலை தீர் பதுமை அன்னையும் நீர்
நயமும் பெருகும் சுனையும் நீயென
நிதம் புகழுவோம்
இதய உணர்ச்சி ததும்பும் உனையே
தினம் நினைத்துமே
உதயத் தாரகை இருளில் நீயென
உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோர்
பாவமும் களைவாய் பரம நாயகியே
பயமும் கவலை தீர் பதுமை அன்னையும் நீர்
நயமும் பெருகும் சுனையும் நீயென
நிதம் புகழுவோம்
புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே
புனித மாமரியே
சுதனும் உனையே தாயென
அளித்தார் சிலுவை அடியிலே
பயமும் கவலை தீர் பதுமை அன்னையும் நீர்
நயமும் பெருகும் சுனையும் நீயென
நிதம் புகழுவோம்
நீ செய்த நன்மை
நீ செய்த நன்மை நினைக்கின்றேன்
என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்
இறைவா இறைவா.......(4)
உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றி காத்து வந்தாய் - ஒரு
அன்னையை போலவே அன்பினை பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்-2
மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனத்தினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றி காத்திருந்தாய்-2
என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்
இறைவா இறைவா.......(4)
உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றி காத்து வந்தாய் - ஒரு
அன்னையை போலவே அன்பினை பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்-2
மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனத்தினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றி காத்திருந்தாய்-2
இதழால் நன்றி சொன்னால்
இதழால் நன்றி சொன்னால்
இறைவனுக் காகிடுமோ
இதயத்தில் நன்றி சொன்னால்
இயேசுவுக் காகிடுமோ
வாழ்வில் காட்டுதலே
வானிறை கேட்கும் நன்றி
மனத்தாழ்ச்சியும் தரித்திரமும்
தயவும் காட்டும் நன்றி
உலகை உருவாக்கி
உண்மை வாழ்வளித்து
தன்னை பலியாக்கி
தந்திடும் இறைவனுக்கு
ஆறுதல் மொழி கூறி
அன்பின் வழிகாட்டி
உயிரும் உண்மையுமாய்
உறவுகள் தருபவருக்கு
இறைவனுக் காகிடுமோ
இதயத்தில் நன்றி சொன்னால்
இயேசுவுக் காகிடுமோ
வாழ்வில் காட்டுதலே
வானிறை கேட்கும் நன்றி
மனத்தாழ்ச்சியும் தரித்திரமும்
தயவும் காட்டும் நன்றி
உலகை உருவாக்கி
உண்மை வாழ்வளித்து
தன்னை பலியாக்கி
தந்திடும் இறைவனுக்கு
ஆறுதல் மொழி கூறி
அன்பின் வழிகாட்டி
உயிரும் உண்மையுமாய்
உறவுகள் தருபவருக்கு
Sunday, July 27, 2008
வாழ்வை அளிக்கும்
மலரென மனதினை
மலரென மனதினை திறந்து வைத்தேன் - அதில்
மனமென இணந்திட உனை அழைத்தேன்
உளமெனும் அகலினில் உனை வளர்த்தேன் அங்கு
உயர்ந்திடும் சுடரினில் எனையளித்தேன்
பால்நிறம் படைத்த வெண்மழலை உள்ளம் -வீணே
கார் நிழல் கொண்டது காலத்தினால்
காவலா கள்ளமெல்லாம் கழித்து -இன்று
கோலமிடும் உந்தன் திருவுருவை-2
அகத்தினில் ஆலயம் அமைத்திடுவேன் -அங்கு
உகந்ததோர் பலியினை நடத்திடுவாய்
தலைவனே உள்ளமெல்லாம் நிறையும்- உந்தன்
பலியுடன் கலந்து யான் உயர்ந்திடுவேன்-2
அழித்திடு மனதினுக் கமைதியையே- என்றும்
விழைந்து யான் விரைந்தனன் உனதகமே
அண்ணலே வெள்ளமெனப் பருகும்- அருள்
புண்ணிய சுனையினில் பருகிடுவேன்-2
மனமென இணந்திட உனை அழைத்தேன்
உளமெனும் அகலினில் உனை வளர்த்தேன் அங்கு
உயர்ந்திடும் சுடரினில் எனையளித்தேன்
பால்நிறம் படைத்த வெண்மழலை உள்ளம் -வீணே
கார் நிழல் கொண்டது காலத்தினால்
காவலா கள்ளமெல்லாம் கழித்து -இன்று
கோலமிடும் உந்தன் திருவுருவை-2
அகத்தினில் ஆலயம் அமைத்திடுவேன் -அங்கு
உகந்ததோர் பலியினை நடத்திடுவாய்
தலைவனே உள்ளமெல்லாம் நிறையும்- உந்தன்
பலியுடன் கலந்து யான் உயர்ந்திடுவேன்-2
அழித்திடு மனதினுக் கமைதியையே- என்றும்
விழைந்து யான் விரைந்தனன் உனதகமே
அண்ணலே வெள்ளமெனப் பருகும்- அருள்
புண்ணிய சுனையினில் பருகிடுவேன்-2
தேடும் அன்பு தெய்வம்
தேடும் அன்பு தெய்வம் எனை
தேடி வந்த நேரம்
கோடி நன்மை கூடும்
புவி வாழும் நிலைகள் மாறும்-2
இந்த வான தேவன் தந்த
வாழ்வுப் பாதை எந்தன்
வாழும் காலம் போகும்(2)
வார்த்தையாகி நின்ற இறைவன் இந்த
வாழ்வைத் தேர்ந்த தலைவன்
பாரில் எங்கும் புதுப்பாதை தந்து அந்த
பாதையில் அழைத்த அறிஞன்
காலம் கடந்த கலைஞன் என் தலைவன்- இந்த
அடிமை அழைப்பு இங்கு ஒழிய எங்கும்
மனித மாண்பு நிறைய
புரட்சி குரல் கொடுத்து அறிய வழி வகுத்து
புதுமை செய்த பெரும் புனிதன்
வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன்- இந்த
தேடி வந்த நேரம்
கோடி நன்மை கூடும்
புவி வாழும் நிலைகள் மாறும்-2
இந்த வான தேவன் தந்த
வாழ்வுப் பாதை எந்தன்
வாழும் காலம் போகும்(2)
வார்த்தையாகி நின்ற இறைவன் இந்த
வாழ்வைத் தேர்ந்த தலைவன்
பாரில் எங்கும் புதுப்பாதை தந்து அந்த
பாதையில் அழைத்த அறிஞன்
காலம் கடந்த கலைஞன் என் தலைவன்- இந்த
அடிமை அழைப்பு இங்கு ஒழிய எங்கும்
மனித மாண்பு நிறைய
புரட்சி குரல் கொடுத்து அறிய வழி வகுத்து
புதுமை செய்த பெரும் புனிதன்
வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன்- இந்த
Saturday, July 26, 2008
நெஞ்சத்திலே தூய்மை
Friday, July 25, 2008
நானே வானினின்று
நானே வானினின்று இறங்கி வந்த
உயிருள்ள உணவு
இதை யாராவது உண்டால்
அவன் என்றுமே வாழ்வான்-2
எனது உணவை உண்ணும் எவனும்
பசியை அறிந்திடார் ஆ....ஆ...(2) என்றும்
எனது குருதி பருகும் எவரும்
தாகம் தெரிந்திடார்
அழிந்து போகும் உணவுக்காக
உழைத்திட வேண்டாம் ஆ...ஆ...(2)என்றும்
அழிந்திடாத வாழ்வு கொடுக்கும
உணவிற்கே உழைப்பீர்
மன்னா உண்ட முன்னோர் எல்லாம்
மடிந்து போயினர் ஆ...ஆ...(2) உங்கள்
மன்னன் என்னை உண்ணும் எவரும்
மடிவதே இல்லை
உயிருள்ள உணவு
இதை யாராவது உண்டால்
அவன் என்றுமே வாழ்வான்-2
எனது உணவை உண்ணும் எவனும்
பசியை அறிந்திடார் ஆ....ஆ...(2) என்றும்
எனது குருதி பருகும் எவரும்
தாகம் தெரிந்திடார்
அழிந்து போகும் உணவுக்காக
உழைத்திட வேண்டாம் ஆ...ஆ...(2)என்றும்
அழிந்திடாத வாழ்வு கொடுக்கும
உணவிற்கே உழைப்பீர்
மன்னா உண்ட முன்னோர் எல்லாம்
மடிந்து போயினர் ஆ...ஆ...(2) உங்கள்
மன்னன் என்னை உண்ணும் எவரும்
மடிவதே இல்லை
ஒளியாம் இறையே
ஒளியாம் இறையே வாராய்
எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய்-2
விண்ணில் வாழும் விமலா
மண்ணில் வாழும் மாந்தர்
உம்மில் என்றும் வாழ
எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக-2
நீரும் மழையும் முகிலால்
பூவும் கனியும் ஒளியால்
உயிரும் உருவும் உம்மால்
வளமும் வாழ்வும் உம்மால் - ஒளியே
அருளே பொங்கும் அமலா
இருளைப் போக்க வாராய்
குறையை நீக்கும் நிமலா
நிறையை வளர்க்க வாராய்- ஒளியே
எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய்-2
விண்ணில் வாழும் விமலா
மண்ணில் வாழும் மாந்தர்
உம்மில் என்றும் வாழ
எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக-2
நீரும் மழையும் முகிலால்
பூவும் கனியும் ஒளியால்
உயிரும் உருவும் உம்மால்
வளமும் வாழ்வும் உம்மால் - ஒளியே
அருளே பொங்கும் அமலா
இருளைப் போக்க வாராய்
குறையை நீக்கும் நிமலா
நிறையை வளர்க்க வாராய்- ஒளியே
எந்தன் உள்ளம்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட இயேசுவே
ஏழை எந்தன் நெஞ்சதனில் வா
உந்தன் அன்பிலே மகிழ்ந்திருப்பேன்
என்னை உந்தன் சொந்தமாக்க வா
பாவி என்னைத் தேடி வந்த இயேசுவே
பாவக் கறைதனை என்னில் நீக்க வா
பாசம் பொங்கும் நெஞ்சம் கொண்ட இயேசுவே
இந்த பாவிதனை ஏற்றுக்கொள்ள வா
நித்தம் நித்தம் உன்னையே வணங்கிடுவேன்
உந்தன் சித்தப்படி என்னை மாற்றவா
உயிர்தரும் உணவான இயேசுவே
எந்தன் உள்ளத்திற்கு உயிர் தரவா
விண்ணகத்தின் வழியான இயேசுவே
என்னை உன்னகத்து கொண்டு செல்லவா
உன்னை எண்ணியே வாழ்ந்திருப்பேன்
என்னை இனி மறந்திருப்பேன்
ஏழை எந்தன் நெஞ்சதனில் வா
உந்தன் அன்பிலே மகிழ்ந்திருப்பேன்
என்னை உந்தன் சொந்தமாக்க வா
பாவி என்னைத் தேடி வந்த இயேசுவே
பாவக் கறைதனை என்னில் நீக்க வா
பாசம் பொங்கும் நெஞ்சம் கொண்ட இயேசுவே
இந்த பாவிதனை ஏற்றுக்கொள்ள வா
நித்தம் நித்தம் உன்னையே வணங்கிடுவேன்
உந்தன் சித்தப்படி என்னை மாற்றவா
உயிர்தரும் உணவான இயேசுவே
எந்தன் உள்ளத்திற்கு உயிர் தரவா
விண்ணகத்தின் வழியான இயேசுவே
என்னை உன்னகத்து கொண்டு செல்லவா
உன்னை எண்ணியே வாழ்ந்திருப்பேன்
என்னை இனி மறந்திருப்பேன்
என்னில் ஒன்றாக
என்னில் ஒன்றாக எந்தன் நல் தேவன்
எழுந்து வருகின்றார்
எண்ணிலா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
உதயம் காண விளையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே
பகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததே
அந்த முகிலும் இருளும் குறையும் தீரமுழுமை தோன்றுமே
என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே
என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன்
என்றும் பகர்ந்த இறைவா என்னை இணைக்க வாருமே
உந்தன் அன்பு விருந்தை நாளும் அருந்திஅமைதி காணுவேன்
எழுந்து வருகின்றார்
எண்ணிலா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
உதயம் காண விளையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே
பகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததே
அந்த முகிலும் இருளும் குறையும் தீரமுழுமை தோன்றுமே
என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே
என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன்
என்றும் பகர்ந்த இறைவா என்னை இணைக்க வாருமே
உந்தன் அன்பு விருந்தை நாளும் அருந்திஅமைதி காணுவேன்
என் தெய்வம் என்னில்
என் தெய்வம் என்னில் வா
என்னோடு உறவாடவா
என்னில்லம் உன்னில்லம் ஆக்கிடவா
என்னை நீ ஆள வா -2
அகத்தின் அருளை அகற்றும் அருளை
பொழிவாய் நின் வரவால்
நெஞ்சார உன்னை எந்நாளும் போற்றும்
நல் உள்ளம் அருள வா
என் தெய்வமே மகிமை மன்னவா
வேந்தனும் ஆயனும் ஆன என் தேவனே
மாந்தரைக் காத்திட வா
உம்மோடு என்றும் ஒன்றிக்கும் வரையும்
என் உள்ளம் எழுந்து வா
என் தெய்வமே மகிமை மன்னவா
என்னோடு உறவாடவா
என்னில்லம் உன்னில்லம் ஆக்கிடவா
என்னை நீ ஆள வா -2
அகத்தின் அருளை அகற்றும் அருளை
பொழிவாய் நின் வரவால்
நெஞ்சார உன்னை எந்நாளும் போற்றும்
நல் உள்ளம் அருள வா
என் தெய்வமே மகிமை மன்னவா
வேந்தனும் ஆயனும் ஆன என் தேவனே
மாந்தரைக் காத்திட வா
உம்மோடு என்றும் ஒன்றிக்கும் வரையும்
என் உள்ளம் எழுந்து வா
என் தெய்வமே மகிமை மன்னவா
என் தேவனே
உயிரின் உணவே
உயிரின் உணவே வாராய் என்னில்
உறைந்திட இயேசுவே வாராய்
உயிரின் உணவே வாராய் -2
ஆவலாய் உனக்காய் காத்திருந்தேன்
நான்ஆயிரம் கனவுகள் கண்டிருந்தேன்-2
ஆறுதல் அளித்து அன்பு செய்ய
இந்தஅன்பின் உணவில் வந்தாயோ-2
என்னையே உனதாய் தேர்ந்து கொண்டாய்
நான்என்னையும் உனக்குத் தந்து விட்டேன்-2
உன்னிலே நானும் நிலைத்திடவே
இந்தஉன்னத விருந்தில் தந்தாயோ-2
உறைந்திட இயேசுவே வாராய்
உயிரின் உணவே வாராய் -2
ஆவலாய் உனக்காய் காத்திருந்தேன்
நான்ஆயிரம் கனவுகள் கண்டிருந்தேன்-2
ஆறுதல் அளித்து அன்பு செய்ய
இந்தஅன்பின் உணவில் வந்தாயோ-2
என்னையே உனதாய் தேர்ந்து கொண்டாய்
நான்என்னையும் உனக்குத் தந்து விட்டேன்-2
உன்னிலே நானும் நிலைத்திடவே
இந்தஉன்னத விருந்தில் தந்தாயோ-2
உன்னில் நான் ஒன்றாக
உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக
என்னில் வா என் மன்னவா-2
நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்
துணையாளன் நீயல்லவா(2)
எனைநாளும் பிரியாமல் உயிரோடு உயிராக
இணைகின்ற என் மன்னவா-2
முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி
மூன்றாகி ஒன்றானவா(2)
இனிதாக கனிவாக அருள்வாழ்வின் நிறைகாணும்
எனைத் தேர்ந்த என் மன்னவா-2
நிலம் வாழ நீராகி மலர் வாழ ஒளியாகி
நலம் சேர்க்கும் என் மன்னவா என்(2)
உளமென்னும் மலர் வாழ அன்பென்னும் மனம்நழ்கும்
இளந்தென்றல் நீயல்லவா-2
என்னில் வா என் மன்னவா-2
நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்
துணையாளன் நீயல்லவா(2)
எனைநாளும் பிரியாமல் உயிரோடு உயிராக
இணைகின்ற என் மன்னவா-2
முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி
மூன்றாகி ஒன்றானவா(2)
இனிதாக கனிவாக அருள்வாழ்வின் நிறைகாணும்
எனைத் தேர்ந்த என் மன்னவா-2
நிலம் வாழ நீராகி மலர் வாழ ஒளியாகி
நலம் சேர்க்கும் என் மன்னவா என்(2)
உளமென்னும் மலர் வாழ அன்பென்னும் மனம்நழ்கும்
இளந்தென்றல் நீயல்லவா-2
இறையவனே என்
இறையவனே என் வழித்துணை நீயே
இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க
வாழ்க ... வாழ்க
திசை தெரியாத மரக்கலம் போல
திரிந்திடும் வாழ்வு உனதொளி காண-(2)
கலங்கரை தீபம் எனக்கு நீயாவாய்
நலந்தரும் வான உணவென வாராய்
இக வழியாக அக ஓளியாவாய்
பகைமையை நீக்கி புது உறவாவாய்-(2)
தகுதியில்லாத எளியனைத் தேடி
எழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய்
பழம்பெரும் பாவ மனிதனை நீக்கி
வளம்தரும் தேவ மகனுனில் சேர்த்து-(2)
புது மனுவாக வதிந்திக வாழ்வை
முடித்திட ஆசி அருளிட வாராய்
இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க
வாழ்க ... வாழ்க
திசை தெரியாத மரக்கலம் போல
திரிந்திடும் வாழ்வு உனதொளி காண-(2)
கலங்கரை தீபம் எனக்கு நீயாவாய்
நலந்தரும் வான உணவென வாராய்
இக வழியாக அக ஓளியாவாய்
பகைமையை நீக்கி புது உறவாவாய்-(2)
தகுதியில்லாத எளியனைத் தேடி
எழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய்
பழம்பெரும் பாவ மனிதனை நீக்கி
வளம்தரும் தேவ மகனுனில் சேர்த்து-(2)
புது மனுவாக வதிந்திக வாழ்வை
முடித்திட ஆசி அருளிட வாராய்
இயேசு நாமம் பாட
இயேசு நாமம் பாடப்பாட
இனிமை பொங்குதே அவர்
இல்லம் வாழ எந்தன் இதயம்
ஏங்கித் தவிக்குதே
ஓங்கும் குரலைக் காக்க வேண்டும்
உன் நாமம் பாடவே
என் உள்ளம் தேறவே என் தாகம் தீரவே
உன் அன்பில் வாழவே
என் தேவா தேவா வா....
ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும்
வான் தீபம் காணவே
என் அன்பில் வாழவே உன்னோடு சேரவே
என்னில் நீ வாழவே
என் தேவா தேவா வா....
இனிமை பொங்குதே அவர்
இல்லம் வாழ எந்தன் இதயம்
ஏங்கித் தவிக்குதே
ஓங்கும் குரலைக் காக்க வேண்டும்
உன் நாமம் பாடவே
என் உள்ளம் தேறவே என் தாகம் தீரவே
உன் அன்பில் வாழவே
என் தேவா தேவா வா....
ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும்
வான் தீபம் காணவே
என் அன்பில் வாழவே உன்னோடு சேரவே
என்னில் நீ வாழவே
என் தேவா தேவா வா....
Thursday, July 24, 2008
இதய இமைதி
இதய இமைதி பெறுகின்றோம்
இந்த விருந்திலே
இனிய வரங்கள் பெருகின்றோம்
இறைவன் உறவிலே
மனதில் தோன்றும் கவலைகள் மறையும்
இறைவன் வரவிலே
உருகும் உள்ளம் மலர்ந்திடும்
உயர் நற்கருணை பந்தியிலே
பெருகும் கண்ணீர் உலர்ந்திடும்
இறைவன் கருணை கரத்திலே
ஆயன் உலகில் கிறிஸ்துவே
அவர்தம் ஆட்டுக் கிடையிலே
புனித வாழ்வு அடையவே
புசிக்கத் தந்தார் உடலையே
இந்த விருந்திலே
இனிய வரங்கள் பெருகின்றோம்
இறைவன் உறவிலே
மனதில் தோன்றும் கவலைகள் மறையும்
இறைவன் வரவிலே
உருகும் உள்ளம் மலர்ந்திடும்
உயர் நற்கருணை பந்தியிலே
பெருகும் கண்ணீர் உலர்ந்திடும்
இறைவன் கருணை கரத்திலே
ஆயன் உலகில் கிறிஸ்துவே
அவர்தம் ஆட்டுக் கிடையிலே
புனித வாழ்வு அடையவே
புசிக்கத் தந்தார் உடலையே
அன்பெனும் வீணையிலே
அன்பெனும் வீணையிலே- நல்
ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே உன்
அருளினை பாடிடுவேன்
அகமெனும் கோவிலிலே - என்
தெய்வமாய் நீ இருப்பாய்-2
அன்பெனும் விளக்கேற்றி - உன்
அடியினை வணங்கிடுவேன்
வாழ்வெனும் சோலையிலே - நல்
தென்றலாய் நீ இருப்பாய்-2
தூய்மையெனும் மலரை- நான்
தான் மலர் படைத்திடுவேன்
தென்றலே கமழ்ந்திடுமே - என்
தெய்வமே நீ இருக்க-2
இன்பமே மலர்ந்திடுமே- நான்
உன்னிலே வாழ்ந்திருக்க
ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே உன்
அருளினை பாடிடுவேன்
அகமெனும் கோவிலிலே - என்
தெய்வமாய் நீ இருப்பாய்-2
அன்பெனும் விளக்கேற்றி - உன்
அடியினை வணங்கிடுவேன்
வாழ்வெனும் சோலையிலே - நல்
தென்றலாய் நீ இருப்பாய்-2
தூய்மையெனும் மலரை- நான்
தான் மலர் படைத்திடுவேன்
தென்றலே கமழ்ந்திடுமே - என்
தெய்வமே நீ இருக்க-2
இன்பமே மலர்ந்திடுமே- நான்
உன்னிலே வாழ்ந்திருக்க
Wednesday, July 23, 2008
எல்லாம் உன் அருளே !!
எல்லாம் உன் அருளே இறைவா
எல்லாம் உன் கொடையே
நான் இருப்பதும் என் இயக்கமும்
நான் மலர்வதும் உன்னில் மறைவதும்
நான் பெற்றுக்கொள்ளாததில்லை இங்கு
நீயின்றி நானேதுமில்லைஎன் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி...எல்லாம்
இந்த பூமியில் நான் வாழ்வதும்
உடலும் உள்ளமும் நலமாவதும சொந்த
உறவுகள் நான் காண்பதும்
பாசங்களில் நான் மகிழ்வதும்
அருளாலே நான் பெற்ற வாய்ப்பு உன்
அன்பாலே நான் பெற்ற அமைப்பு
என் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி
என்னைத் தேர்ந்ததும் என்னில் சேர்ந்ததும்
எங்கெங்கும் நான் காணும் எழில்களும்
என் திறமைகள் என் உரிமைகள்
நீதியில் நான் கொண்ட காதலும்
உன்னோடு நான் கொள்ளும் உறவும்
இவ்வுலகோடு நான் கொள்ளும் பரிவும்
என் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி
எல்லாம் உன் கொடையே
நான் இருப்பதும் என் இயக்கமும்
நான் மலர்வதும் உன்னில் மறைவதும்
நான் பெற்றுக்கொள்ளாததில்லை இங்கு
நீயின்றி நானேதுமில்லைஎன் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி...எல்லாம்
இந்த பூமியில் நான் வாழ்வதும்
உடலும் உள்ளமும் நலமாவதும சொந்த
உறவுகள் நான் காண்பதும்
பாசங்களில் நான் மகிழ்வதும்
அருளாலே நான் பெற்ற வாய்ப்பு உன்
அன்பாலே நான் பெற்ற அமைப்பு
என் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி
என்னைத் தேர்ந்ததும் என்னில் சேர்ந்ததும்
எங்கெங்கும் நான் காணும் எழில்களும்
என் திறமைகள் என் உரிமைகள்
நீதியில் நான் கொண்ட காதலும்
உன்னோடு நான் கொள்ளும் உறவும்
இவ்வுலகோடு நான் கொள்ளும் பரிவும்
என் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி
உன் பாதம்
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காக தருகின்றேன்-2
மலைகளில் விழுந்து மனமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து.....இறைவா
பசி உள்ளோர்க்கு உணவாக நான் இருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன்-2
விழுந்தவரை தூக்கிடுவேன்- இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்- இதுவே
நான் தரும் காணிக்கையே இறைவா
இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன
கையில்இருப்பதை கொடுப்பதே இன்பமென்றாய்-2
பலியை அல்ல இரக்கத்தையே- என்னில்
விரும்புகின்ற இறைமகனே- உனைப்போல்
நானும் உருவாகிட ......இறைவா
என்னையே உனக்காக தருகின்றேன்-2
மலைகளில் விழுந்து மனமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து.....இறைவா
பசி உள்ளோர்க்கு உணவாக நான் இருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன்-2
விழுந்தவரை தூக்கிடுவேன்- இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்- இதுவே
நான் தரும் காணிக்கையே இறைவா
இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன
கையில்இருப்பதை கொடுப்பதே இன்பமென்றாய்-2
பலியை அல்ல இரக்கத்தையே- என்னில்
விரும்புகின்ற இறைமகனே- உனைப்போல்
நானும் உருவாகிட ......இறைவா
என்னுயிர் தெய்வம்
என்னுயிர் தெய்வம் இயேசுவே என்னில் வருவீர்
வாழ்விக்கும் தெய்வம் வழித்துணையாகிடுவீர்
நீயாக நான் மாற வேண்டும் எந்நாளும்
அன்பாலே ஆட்கொள்ள வேண்டும்வாழும் தெய்வமே
வாழ்வு தரும் உணவாக என்னில் வருவாயே
வழிகாட்டும் ஒளியாக என்னில் எழுவாய்-2
தேவனே ஜீவனே என் உயிரில் கலந்திட வா-2
தினமும் உன்னில் இணைந்து மகிழ்வேன்
அன்பே உன்னை நினைந்து உருகி
ஆனந்தம் கண்டிடுவேன்-2
தேடுகின்ற ஆயனாக என்னைத் தேடியே
தேற்றுகின்ற தாயாக என்னைத் தாங்குவாய்-2
அன்பனே நண்பனே என் உள்ளம் நிறந்திடவா-2
வாழ்வில் என்றும் வளமே காண
அருளின் செல்வம் அன்பின் தெய்வம்
என் மனம் எழுந்திடுவாய்-2
வாழ்விக்கும் தெய்வம் வழித்துணையாகிடுவீர்
நீயாக நான் மாற வேண்டும் எந்நாளும்
அன்பாலே ஆட்கொள்ள வேண்டும்வாழும் தெய்வமே
வாழ்வு தரும் உணவாக என்னில் வருவாயே
வழிகாட்டும் ஒளியாக என்னில் எழுவாய்-2
தேவனே ஜீவனே என் உயிரில் கலந்திட வா-2
தினமும் உன்னில் இணைந்து மகிழ்வேன்
அன்பே உன்னை நினைந்து உருகி
ஆனந்தம் கண்டிடுவேன்-2
தேடுகின்ற ஆயனாக என்னைத் தேடியே
தேற்றுகின்ற தாயாக என்னைத் தாங்குவாய்-2
அன்பனே நண்பனே என் உள்ளம் நிறந்திடவா-2
வாழ்வில் என்றும் வளமே காண
அருளின் செல்வம் அன்பின் தெய்வம்
என் மனம் எழுந்திடுவாய்-2
உயிருள்ள உணவு
நானே வானின்று வந்த உணவு என்னை
உண்பவன் என்றுமே வாழ்வான்
என்று சொன்ன இயேசுவே
உணவாக வா என் துணையாகவா
என் மன வானிலே என் சொந்தமாகவா-2
தீராத தாகத்தில் தவிக்கின்ற நெஞ்சம்
தினம் தினம் போராடி சோர்வுற்று அஞ்சும் தாகம்
கொண்டோர்களை சுமை சுமந்தோர்களை-2- அன்பால்
கைதூக்கி களைப்பாற்றும் என் இயேசுவே-2
வாழ்வுக்கும் உணவாக நீ வந்த நேரம்
நோய் தீர்க்கும் மருந்தாக தினம் என்னை காரும்
உள்ளம்உடைந்தோர்களை மாண்பு இழந்தோர்களை-2- உந்தன்
பாசத்தால் அணைக்கின்ற என் இயேசுவ-2
உண்பவன் என்றுமே வாழ்வான்
என்று சொன்ன இயேசுவே
உணவாக வா என் துணையாகவா
என் மன வானிலே என் சொந்தமாகவா-2
தீராத தாகத்தில் தவிக்கின்ற நெஞ்சம்
தினம் தினம் போராடி சோர்வுற்று அஞ்சும் தாகம்
கொண்டோர்களை சுமை சுமந்தோர்களை-2- அன்பால்
கைதூக்கி களைப்பாற்றும் என் இயேசுவே-2
வாழ்வுக்கும் உணவாக நீ வந்த நேரம்
நோய் தீர்க்கும் மருந்தாக தினம் என்னை காரும்
உள்ளம்உடைந்தோர்களை மாண்பு இழந்தோர்களை-2- உந்தன்
பாசத்தால் அணைக்கின்ற என் இயேசுவ-2
என்னை தந்திட
என்னைத் தந்திட எழுந்து வருகிறேன்
எல்லாம் தந்த உந்தன் அருளோடு வாழவே-2
மாறிட மறுக்கும் என் மனதினை தருகிறேன்
மாற்றம் வேண்டியே என்னைப் படைக்கிறேன்-2
இழந்து நான் பலியாகி இறை உன்னை
தந்திடவே ஏற்றிடு மாற்றிடு
எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு
பகைமை வளைக்கும் என் உணர்வினை தருகிறேன்
பாசம் வளர்த்திட உன் உறவினை கேட்கிறேன்-2
உறவின் கரமாகி உனதருளை
கண்டிடவே ஏற்றிடு மாற்றிடு
எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு
எல்லாம் தந்த உந்தன் அருளோடு வாழவே-2
மாறிட மறுக்கும் என் மனதினை தருகிறேன்
மாற்றம் வேண்டியே என்னைப் படைக்கிறேன்-2
இழந்து நான் பலியாகி இறை உன்னை
தந்திடவே ஏற்றிடு மாற்றிடு
எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு
பகைமை வளைக்கும் என் உணர்வினை தருகிறேன்
பாசம் வளர்த்திட உன் உறவினை கேட்கிறேன்-2
உறவின் கரமாகி உனதருளை
கண்டிடவே ஏற்றிடு மாற்றிடு
எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு
குறையாத அன்பு
குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலை மோதுதே அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே-2
கண்மூடி இரவில் நான் தூங்கும்போது
கண்ணாக இயேசு எனைக் காக்கின்றார்(2)- உன்னை
எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண் மீது வழ வழி செய்கின்றாய் ஆ...ஆ....
நான் மண்மீது வாழ வழி செய்கின்றாய்
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவில் முடிவாகுமே(2)- மண்ணில்
துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ...ஆ...
கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே
நிறைவாக என்னில் அலை மோதுதே அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே-2
கண்மூடி இரவில் நான் தூங்கும்போது
கண்ணாக இயேசு எனைக் காக்கின்றார்(2)- உன்னை
எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண் மீது வழ வழி செய்கின்றாய் ஆ...ஆ....
நான் மண்மீது வாழ வழி செய்கின்றாய்
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவில் முடிவாகுமே(2)- மண்ணில்
துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ...ஆ...
கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே
நெஞ்சத்தில் வா
நெஞ்சதில் வா என் தெய்வமே
நீயாக நான் மாறவே
உன்னை நான் கண்டு உன் பாதை சென்று
நீயாக நான் வாழவே-2
என் உள்ளம் நீ வந்து அமர்கின்ற நேரம்
என் கண்கள் புதுப் பர்வை காணும்-2
என்னில் நீ ஒன்றான நிலையான உறவில்
புது வாழ்வு எனை வந்து சேரும்
எனில் வாழ்வது இனி நீயல்லவா-2
உன் வாழ்வு எந்தன் வழி அல்லவா
உன்னோடு கைகோர்த்து நான் செல்லும் பாதை
ஒரு போதும் தவறாவதில்லை-2
என்னோடு நீ வாழும் சுகமான நினைவில்
எதைக் கண்டும் நான் அஞ்சவில்லை
என் நெஞ்சமே இனி உன் இல்லமே-2
என்னோடு உடன்வாழ வா தெய்வமே
நீயாக நான் மாறவே
உன்னை நான் கண்டு உன் பாதை சென்று
நீயாக நான் வாழவே-2
என் உள்ளம் நீ வந்து அமர்கின்ற நேரம்
என் கண்கள் புதுப் பர்வை காணும்-2
என்னில் நீ ஒன்றான நிலையான உறவில்
புது வாழ்வு எனை வந்து சேரும்
எனில் வாழ்வது இனி நீயல்லவா-2
உன் வாழ்வு எந்தன் வழி அல்லவா
உன்னோடு கைகோர்த்து நான் செல்லும் பாதை
ஒரு போதும் தவறாவதில்லை-2
என்னோடு நீ வாழும் சுகமான நினைவில்
எதைக் கண்டும் நான் அஞ்சவில்லை
என் நெஞ்சமே இனி உன் இல்லமே-2
என்னோடு உடன்வாழ வா தெய்வமே
வெண்புறா
ஆவி என் மேலே
ஆண்டவரின் ஆவி என் மேலே
ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார்(2)
எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும்
சிறைபட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தேர்ந்தெடுத்தார்
உன்னை அன்று அழைத்ததும் நாமே
உரிய பெயரை வைத்ததும் நாமே(2)
உன்னை அன்று மீட்டதும் நாமே
உனது துணையாய் இருப்பது நாமே- ஆண்டவரின்
நிறை உண்மைக்கு சாட்சி சொல்லவும்
நோயுற்றோரை குணமாக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தேர்ந்தெடுத்தார்
தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலை தான் கடந்தாலும்(2)
அருகிலேயே நாம் இருக்கின்றோம்
அழைத்து உன்னை வழி நடத்துகின்றோம்- ஆண்டவரின்
ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார்(2)
எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும்
சிறைபட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தேர்ந்தெடுத்தார்
உன்னை அன்று அழைத்ததும் நாமே
உரிய பெயரை வைத்ததும் நாமே(2)
உன்னை அன்று மீட்டதும் நாமே
உனது துணையாய் இருப்பது நாமே- ஆண்டவரின்
நிறை உண்மைக்கு சாட்சி சொல்லவும்
நோயுற்றோரை குணமாக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தேர்ந்தெடுத்தார்
தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலை தான் கடந்தாலும்(2)
அருகிலேயே நாம் இருக்கின்றோம்
அழைத்து உன்னை வழி நடத்துகின்றோம்- ஆண்டவரின்
ஏழிசை நாதனே
ஏழிசை நாதனே எழுவாய் இறை
அருளை என்னில் நீ பொழிவாய்
பலவரங்கள் தந்து எனைக் காப்பாய்
வழி காட்ட எழுந்து வருவாய்
வாழ்வும் வழியும் நீ எனக்கு
வளங்கள் சேர்க்கும் அருமருந்து-2
உறவை வளர்க்கும் விருந்து -2- என்னில்
நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2
விழியும் ஒளியும் நீ எனக்கு
விடியல் காட்டும் ஒளிவிளக்கு-2
மனிதம் வாழும் தெய்வம்-2- என்னில்
புனிதம் வளர்க்கும் நல் இதயம்
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2
அருளை என்னில் நீ பொழிவாய்
பலவரங்கள் தந்து எனைக் காப்பாய்
வழி காட்ட எழுந்து வருவாய்
வாழ்வும் வழியும் நீ எனக்கு
வளங்கள் சேர்க்கும் அருமருந்து-2
உறவை வளர்க்கும் விருந்து -2- என்னில்
நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2
விழியும் ஒளியும் நீ எனக்கு
விடியல் காட்டும் ஒளிவிளக்கு-2
மனிதம் வாழும் தெய்வம்-2- என்னில்
புனிதம் வளர்க்கும் நல் இதயம்
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2
அழைக்கிறார் இயேசு
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட-2
சாட்சிகளாய் என்றும் வழ்ந்திட இந்நாளிலே
தேடியே தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தங்குவார்
துயரினில் நம்மை தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியை காட்டுவார்-2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினில் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆறுதல் நெஞ்சில் பொழியுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்-2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
ஆவலாய் நாம் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட-2
சாட்சிகளாய் என்றும் வழ்ந்திட இந்நாளிலே
தேடியே தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தங்குவார்
துயரினில் நம்மை தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியை காட்டுவார்-2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினில் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆறுதல் நெஞ்சில் பொழியுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்-2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
நீயே நிரந்தரம்
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்
நான் வாழ்ந்த பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் ....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்(2)
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்(2)
நிரந்தரம்...நிரந்தரம்.....நீயே நிரந்தரம்...(2)
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நினைவாழ்வு என்றும் நிஜமாவதில்லை நிரந்தரம்
அதன் விலையாக என்னை உன்னில் இணைப்பாய் நிரந்தரம்(2)
நிரந்தரம்....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்.....(2)
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்
நான் வாழ்ந்த பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் ....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்(2)
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்(2)
நிரந்தரம்...நிரந்தரம்.....நீயே நிரந்தரம்...(2)
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நினைவாழ்வு என்றும் நிஜமாவதில்லை நிரந்தரம்
அதன் விலையாக என்னை உன்னில் இணைப்பாய் நிரந்தரம்(2)
நிரந்தரம்....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்.....(2)
உலகமெல்லாம்
உலகமெல்லாம் எனக்காதாயம்
என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம்
என வாழ்ந்தால் கவலையில்லை
அழியும் செல்வம் சேர்ப்பதா
அழியா ஆன்மாவை காப்பதா
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்- உலகமெல்லாம்
பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம்-2
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை-2
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான்-2
அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை-2
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலமும் நிலைப்பதில்லை-2
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான்-2
என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம்
என வாழ்ந்தால் கவலையில்லை
அழியும் செல்வம் சேர்ப்பதா
அழியா ஆன்மாவை காப்பதா
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்- உலகமெல்லாம்
பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம்-2
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை-2
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான்-2
அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை-2
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலமும் நிலைப்பதில்லை-2
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான்-2
தந்திட வருகின்றேன்
தந்திட வருகின்றேன்
நிறைவாய் என்னையே உமக்காக
இருப்பதை எல்லாம் கொடுக்கின்றேன்
கொடுத்தவர் நீர் அன்றோ (2) இறைவா - தந்திட
எனக்கென்று கொடுத்ததெல்லாம்
எடுத்துக்கொள் முழுவதும்-2
இளமையும் வளமையும் நான்வழங்கிட வறியவர்க்கே-2
வரம் தருவாய் இறைமகனே - தந்திட
என்னையும் உன்னைப் போல
உடைத்திட வருகின்றேன்-2
உலகோர் வாழ்ந்திடவும்உரிமைகள் அடைந்திடவும்
வரம் தருவாய் இறைமகனே - தந்திட
நிறைவாய் என்னையே உமக்காக
இருப்பதை எல்லாம் கொடுக்கின்றேன்
கொடுத்தவர் நீர் அன்றோ (2) இறைவா - தந்திட
எனக்கென்று கொடுத்ததெல்லாம்
எடுத்துக்கொள் முழுவதும்-2
இளமையும் வளமையும் நான்வழங்கிட வறியவர்க்கே-2
வரம் தருவாய் இறைமகனே - தந்திட
என்னையும் உன்னைப் போல
உடைத்திட வருகின்றேன்-2
உலகோர் வாழ்ந்திடவும்உரிமைகள் அடைந்திடவும்
வரம் தருவாய் இறைமகனே - தந்திட
உந்தன் பாதச்சுவடுகளில்
உந்தன் பாதச்சுவடுகளில் இறைவா
பயணம் தொடங்குகிறேன்
உந்தன் பணிக்காக நான் பலியாக எனை
அழைத்தாய் வந்தேனய்யா- உந்தன்
உமது பாதையில் பயணம் தொடர்வேன்
பயணம் தொடர்வேன்... பயணம் தொடர்வேன்....
அழைத்தவனே என்னை அழைத்தவனே- உந்தன்
ஆற்றலை நாடுகின்றேன்
உயிர்த்தவனே நின் உயிர்த்த ஆவியால்
ஊக்கம் வேண்டுகின்றேன் - அழைத்தவனே
புதுச்சமுதாயம் வடிவமைக்கும்- உந்தன்
புனித கரங்களாய் மாறிடவே (2)- உந்தன்
மலர்களிலே வண்ண மலர்களிலே உந்தன்
நறுமணம் கமழ்வது போல்
மணங்களிலும் என் மனதினிலும்- உம்
அருள்மனம் சேர்த்தருளும் - மலர்களிலே
இதயங்களை நான் ஈர்த்திடுவேன் உந்தன்
இனிய வானரசின் உறவாக(2)- உந்தன
பயணம் தொடங்குகிறேன்
உந்தன் பணிக்காக நான் பலியாக எனை
அழைத்தாய் வந்தேனய்யா- உந்தன்
உமது பாதையில் பயணம் தொடர்வேன்
பயணம் தொடர்வேன்... பயணம் தொடர்வேன்....
அழைத்தவனே என்னை அழைத்தவனே- உந்தன்
ஆற்றலை நாடுகின்றேன்
உயிர்த்தவனே நின் உயிர்த்த ஆவியால்
ஊக்கம் வேண்டுகின்றேன் - அழைத்தவனே
புதுச்சமுதாயம் வடிவமைக்கும்- உந்தன்
புனித கரங்களாய் மாறிடவே (2)- உந்தன்
மலர்களிலே வண்ண மலர்களிலே உந்தன்
நறுமணம் கமழ்வது போல்
மணங்களிலும் என் மனதினிலும்- உம்
அருள்மனம் சேர்த்தருளும் - மலர்களிலே
இதயங்களை நான் ஈர்த்திடுவேன் உந்தன்
இனிய வானரசின் உறவாக(2)- உந்தன
பூந்தென்றலே
பூந்தென்றலே அருளூற்றும் சுரம் பாடுதே
பூவின் அழகில் நெஞ்சம் பேசுதே....ஓ ..ஓ
உன்அன்பை காணுதே -பூந்தென்றலே
புதுராக சந்தத்திலே வண்டுகள் பாடும்
ஓடிவரும் ஓடை ஒலி தாளங்கள் போடும்-2
உன் அன்பின் உயரத்தையே மலைகள் சொல்லுமே
உன் அன்பின் ஆழத்தையே தாய்மை காட்டுமே
இதமான ராகங்களும் என்னில் தோன்றுமே....
கனிவான உன் முகத்தில் வெண்பனி ஒளிரும்
கண்வியக்கும் அழகுடனே தாரகை மிளிரும்-2
கடலும் வானும் அருவிகளும் உன்திறன் சான்றே
அன்பும் அருளும் பெருகிவரும் உன் திருக்கொடையே
வளமான கனவுகளும் கண்ணில் தோன்றுமே....
பூவின் அழகில் நெஞ்சம் பேசுதே....ஓ ..ஓ
உன்அன்பை காணுதே -பூந்தென்றலே
புதுராக சந்தத்திலே வண்டுகள் பாடும்
ஓடிவரும் ஓடை ஒலி தாளங்கள் போடும்-2
உன் அன்பின் உயரத்தையே மலைகள் சொல்லுமே
உன் அன்பின் ஆழத்தையே தாய்மை காட்டுமே
இதமான ராகங்களும் என்னில் தோன்றுமே....
கனிவான உன் முகத்தில் வெண்பனி ஒளிரும்
கண்வியக்கும் அழகுடனே தாரகை மிளிரும்-2
கடலும் வானும் அருவிகளும் உன்திறன் சான்றே
அன்பும் அருளும் பெருகிவரும் உன் திருக்கொடையே
வளமான கனவுகளும் கண்ணில் தோன்றுமே....
வருகின்றோம் இந்நாளில்
வருகின்றோம் இந்நாளில் நன்றி
காணிக்கை தருகின்றோம்(2)
கரம் பற்றி நடந்திடும் என் தலைவா
என் கிண்ணம் நிரம்பிட செய்திடுவாய்- வரு
உழைப்பினை எடுத்து வந்தோம்
உமக்கு அதன்பலன் தனை அர்ப்பணித்தோம்
மனிதத்தை வளர்த்திடவே நாங்கள்
உந்தன்தியாகத்தை வாழ்த்திடுவோம்
இறைவா... என் இறைவா....உம்
மலரடி பாதம் பணிந்திடுவோம்(2)
குறைகளை நீக்கி ஏற்றுடுவாய்
ஓளிர்ந்திடும் சுடராய் மாற்றிடுவாய் -வரு
ஏழைகள் உயர்ந்திடவே என்றும்
எங்கள்வாழ்வினை பகிர்ந்தளிப்போம்
சமனிலை தோன்றிடவே எங்கும்
பாவபிரிவினை நீக்கிடுவோம்
உயிரே...என் உறவே...புதுவசந்தம்
விரைவில் மலர்ந்திடவே(2)
ஏழையின் துயரம் போக்கிடவே
ஏற்றிடு எங்களின் கணிக்கையை- வரு
காணிக்கை தருகின்றோம்(2)
கரம் பற்றி நடந்திடும் என் தலைவா
என் கிண்ணம் நிரம்பிட செய்திடுவாய்- வரு
உழைப்பினை எடுத்து வந்தோம்
உமக்கு அதன்பலன் தனை அர்ப்பணித்தோம்
மனிதத்தை வளர்த்திடவே நாங்கள்
உந்தன்தியாகத்தை வாழ்த்திடுவோம்
இறைவா... என் இறைவா....உம்
மலரடி பாதம் பணிந்திடுவோம்(2)
குறைகளை நீக்கி ஏற்றுடுவாய்
ஓளிர்ந்திடும் சுடராய் மாற்றிடுவாய் -வரு
ஏழைகள் உயர்ந்திடவே என்றும்
எங்கள்வாழ்வினை பகிர்ந்தளிப்போம்
சமனிலை தோன்றிடவே எங்கும்
பாவபிரிவினை நீக்கிடுவோம்
உயிரே...என் உறவே...புதுவசந்தம்
விரைவில் மலர்ந்திடவே(2)
ஏழையின் துயரம் போக்கிடவே
ஏற்றிடு எங்களின் கணிக்கையை- வரு
நீயே எந்தன் தெய்வம்
நீயே எந்தன் தெய்வம்
நீயின்றி வேறேது சொந்தம்-2
ஆயிரம் மனிதரில் என்னைத் தேடினாய்
அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய்
ஆ....ஆ....ஆ....ஆ......ஆயிரம்
கண்ணென காத்திட எந்தன் நெஞ்சில் வா
வாகவலையின்றி நான் வாழ என்னில் எழுந்து வா -நீயே
விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்
வீணென என் மனம் சோர்ந்து போகலாம்
ஆ....ஆ....ஆ....ஆ.....விடியுமோ
துணைவரும் அருளினால் என்னைத் தாங்க வா வா
துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா -நீயே
நீயின்றி வேறேது சொந்தம்-2
ஆயிரம் மனிதரில் என்னைத் தேடினாய்
அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய்
ஆ....ஆ....ஆ....ஆ......ஆயிரம்
கண்ணென காத்திட எந்தன் நெஞ்சில் வா
வாகவலையின்றி நான் வாழ என்னில் எழுந்து வா -நீயே
விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்
வீணென என் மனம் சோர்ந்து போகலாம்
ஆ....ஆ....ஆ....ஆ.....விடியுமோ
துணைவரும் அருளினால் என்னைத் தாங்க வா வா
துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா -நீயே
நன்றி என்று சொல்லி
நன்றி என்று சொல்லி
எந்தன் நெஞ்சம் உன்னில் வாழும்
எந்த நாளும் உந்தன் அன்பை தேடும்
அது துள்ளி வரும் தென்றலிலே
புத்தம் புது கவினூறு
மன்னவனின் புகழினைப் பாடும்
விழிகளில் தொடர்ந்திடும் ஏக்கம் அது
கதிர் கண்ட பனி போல மாறும்-2
இதயத்தில் இனிய ராகங்கள் உதயமாகுமே
உள்ளங்களில் நீ வாழ
உறவுகள் நான் கூட
உன் வாசல் தேடி வருவேன்
என் மன்னவனே! - நன்றி
உருவத்தில் தெரிகின்ற தெய்வம்
நம்இதயத்தில் வாழ்ந்திட வேண்டும்-2
மனிதரே தெய்வம் வாழ்ந்திடும் கோயில் ஆகுமே
புத்தம் புது பூமி ஒன்று
நீயும் வந்து வாழ இங்கு
உன் வாசல் தேடி வருவேன்
என் மன்னவனே !- நன்றி
எந்தன் நெஞ்சம் உன்னில் வாழும்
எந்த நாளும் உந்தன் அன்பை தேடும்
அது துள்ளி வரும் தென்றலிலே
புத்தம் புது கவினூறு
மன்னவனின் புகழினைப் பாடும்
விழிகளில் தொடர்ந்திடும் ஏக்கம் அது
கதிர் கண்ட பனி போல மாறும்-2
இதயத்தில் இனிய ராகங்கள் உதயமாகுமே
உள்ளங்களில் நீ வாழ
உறவுகள் நான் கூட
உன் வாசல் தேடி வருவேன்
என் மன்னவனே! - நன்றி
உருவத்தில் தெரிகின்ற தெய்வம்
நம்இதயத்தில் வாழ்ந்திட வேண்டும்-2
மனிதரே தெய்வம் வாழ்ந்திடும் கோயில் ஆகுமே
புத்தம் புது பூமி ஒன்று
நீயும் வந்து வாழ இங்கு
உன் வாசல் தேடி வருவேன்
என் மன்னவனே !- நன்றி
கடவுளின் வார்த்தை
கடவுளின் உயிருள்ளது
ஆற்றல் மிகுந்தது
ஆவியில் மலர்ந்தது நல்வழி சேர்ப்பது
இதயத்தை அறிவது- கடவுளின்
சோகங்கள் சூழ்ந்திடும் வாழ்வினிலே
ஆறுதல் அளித்திடும் வார்த்தையிது-2
நம்பிக்கை இழந்து சோர்ந்தவர்க்கு
புது ஒளி தந்திடும் வார்த்தையிது
அமைதியை அருளும் வார்த்தையிது
ஆற்றலை தந்திடும் வார்த்தையிது- கடவுளின்
துயர்களும் தடைகளும் கடந்து வர
துணிவினைத் தந்திடும் வார்த்தையிது-2
நீதியும் அன்பும் நிலைத்து எழ
நேர்வழி காட்டிடும் வார்த்தையிது
ஏற்றத் தாழ்வுகள் தகர்ந்து விழ
சமத்துவம் படைக்கும் வார்த்தையிது - கடவுளின்
ஆற்றல் மிகுந்தது
ஆவியில் மலர்ந்தது நல்வழி சேர்ப்பது
இதயத்தை அறிவது- கடவுளின்
சோகங்கள் சூழ்ந்திடும் வாழ்வினிலே
ஆறுதல் அளித்திடும் வார்த்தையிது-2
நம்பிக்கை இழந்து சோர்ந்தவர்க்கு
புது ஒளி தந்திடும் வார்த்தையிது
அமைதியை அருளும் வார்த்தையிது
ஆற்றலை தந்திடும் வார்த்தையிது- கடவுளின்
துயர்களும் தடைகளும் கடந்து வர
துணிவினைத் தந்திடும் வார்த்தையிது-2
நீதியும் அன்பும் நிலைத்து எழ
நேர்வழி காட்டிடும் வார்த்தையிது
ஏற்றத் தாழ்வுகள் தகர்ந்து விழ
சமத்துவம் படைக்கும் வார்த்தையிது - கடவுளின்
ஆரிராரிரோ
ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்கு
என் அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு
அழியாத ஆன்மாவின் விருந்தாகவே
என்னில் எழுந்தே நீ வா - உன்
ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே
என்னில் இசை பாடவா
கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்
தெய்வமே செல்வமே- நீ
என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடிவா அருள் கோடி தா
அமுதாக ஆன்மாவில் வருகின்றவா
என்னை உருவாக்க வா
நல் அணையாத தீபமாய் திகழ்கின்றவா
ஆன்ம ஒளியேற்றவா
சிறுதிரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்
தெய்வமே செல்வமே- நீ
என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடிவா அருள் கோடி தா
என் அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு
அழியாத ஆன்மாவின் விருந்தாகவே
என்னில் எழுந்தே நீ வா - உன்
ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே
என்னில் இசை பாடவா
கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்
தெய்வமே செல்வமே- நீ
என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடிவா அருள் கோடி தா
அமுதாக ஆன்மாவில் வருகின்றவா
என்னை உருவாக்க வா
நல் அணையாத தீபமாய் திகழ்கின்றவா
ஆன்ம ஒளியேற்றவா
சிறுதிரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்
தெய்வமே செல்வமே- நீ
என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடிவா அருள் கோடி தா
நான் தேடும் ஒரு நிறைவு
நான் தேடும் ஒரு நிறைவு உன்னில் கண்டு கொண்டேன்
வான் தேவன் உன் பிறப்பில் உனதன்பு கண்டேன்
வாரும் யேசுவே எங்கள் அன்பின் நேசரே
மண் படைத்தாய் விண் படைத்தாய்
நிறைவில்லை நிறைவில்லையோ
பொன் படைத்தாய் பொருள் படைத்தாய்
நிறைவில்லை நிறைவில்லையோ
எனைப் படைத்து எழில் படைத்தாய் நிறைவில்லையோ- இறைவா
நிறைவடைய எம்மிடையே பிறந்தாயோ - வாரும்
அன்பு இல்லை அமைதி இல்லை எம்மிடையே எம்மிடையே
உண்மையில்லை உவகையில்லை உலகினிலே உலகினிலே
அன்பு இல்லை அமைதி இல்லை
உண்மை இல்லை உவகை இல்லை
இந்த நிலை மாறிடவோ அப்ப வடிவிலே- இறைவா
மனுவுருவாய் மைந்தர் எம்மில் மலர்ந்தாயோ - வாரும்
வான் தேவன் உன் பிறப்பில் உனதன்பு கண்டேன்
வாரும் யேசுவே எங்கள் அன்பின் நேசரே
மண் படைத்தாய் விண் படைத்தாய்
நிறைவில்லை நிறைவில்லையோ
பொன் படைத்தாய் பொருள் படைத்தாய்
நிறைவில்லை நிறைவில்லையோ
எனைப் படைத்து எழில் படைத்தாய் நிறைவில்லையோ- இறைவா
நிறைவடைய எம்மிடையே பிறந்தாயோ - வாரும்
அன்பு இல்லை அமைதி இல்லை எம்மிடையே எம்மிடையே
உண்மையில்லை உவகையில்லை உலகினிலே உலகினிலே
அன்பு இல்லை அமைதி இல்லை
உண்மை இல்லை உவகை இல்லை
இந்த நிலை மாறிடவோ அப்ப வடிவிலே- இறைவா
மனுவுருவாய் மைந்தர் எம்மில் மலர்ந்தாயோ - வாரும்
யேசு அழைக்கிறார்
Tuesday, July 22, 2008
அழகிய கவிதையில்
அன்பே கடவுள் என்றால்
அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்
மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா-2
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா
இறைவாக்கு சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா-2
மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா
அளவில்லா அறிவுத்திறன் அன்புக்கு ஈடாகுமா-2
மலைபெயர் விசுவாசமும் அன்புக்கு ஈடாகுமா
உள்பொருள் வழங்கும் தன்மை அன்புக்கு ஈடாகுமா-2
என் உடல் எரிப்பதுமே அன்புக்கு ஈடாகுமா
நம்பிக்கை விசுவாசமும் நிலையாய் நின்றுவிடும்-2
நிலையாய் நிற்கும் அவை அன்புக்கு ஈடாகுமா
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்
மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா-2
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா
இறைவாக்கு சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா-2
மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா
அளவில்லா அறிவுத்திறன் அன்புக்கு ஈடாகுமா-2
மலைபெயர் விசுவாசமும் அன்புக்கு ஈடாகுமா
உள்பொருள் வழங்கும் தன்மை அன்புக்கு ஈடாகுமா-2
என் உடல் எரிப்பதுமே அன்புக்கு ஈடாகுமா
நம்பிக்கை விசுவாசமும் நிலையாய் நின்றுவிடும்-2
நிலையாய் நிற்கும் அவை அன்புக்கு ஈடாகுமா
Subscribe to:
Posts (Atom)