Thursday, August 28, 2008

அன்பின் பலியாய்

அன்பின் பலியாய் ஏற்பாய் உம்மை
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்(2)
புண்படும் மனதின் துயர் தீர்ப்பாய்- எம்மை
புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்

வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம்- அருள்
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம்
முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் எம்மை
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்

படைப்பின் மீதே பரிவிருக்க- அந்தப்
பரிவால் உன்மகன் உயிர் கொடுக்க‌
படைப்பே உம்மால் மகிழ்ந்திருக்க- உம்மில்
படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க‌

அர்ப்பணித்தேன்

அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
என்னையே முற்றிலும் அர்ப்பணித்தேன்
அன்பு வாழ்விற்கு அர்ப்பணித்தேன்(2)

பொன் பொருள் என்னிடம் இல்லை
உன் பொற்பதம் படைத்து நான் வாழ‌(2)
என் வாழ்வை உமக்கு கொடுக்கின்றேன்(2)
ஏற்றருளும் என் இறைவனே
என் தலைவனே என் தலைவனே-அர்ப்பணித்தேன்

வாழ்வின் பொருளை நான் இழந்தேன்- உன்
வாழ்வின் மகிமை நான் அறிந்தேன்(2)
உன் பாதம் பணிந்து நான் வாழ‌(2)
துணை செய்வாய் என் இறைவனே
என் தலைவனே என் தலைவனே - அர்ப்பணித்தேன்

வழிகாட்டும் என் தெய்வமே

வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே
நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி
எனைத் தாங்கும் என் தெய்வமே
என் நிழலாக எழும் தெய்வமே - வழிகாட்டும்

எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கின்றேன்
என்பாத நிழல் நாடும் மனம் கேட்கின்றேன்
நீரின்றியே மண்ணில் வளமில்லையே
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
எனைத் தாங்கும் என் தெய்வமே
என் உயிராக எழும் தெய்வமே

நிலவெங்கும் ஒளிந்தாலும் விழிமூடி பயனேது
துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகையேது
பலனாக கை மீது வா இங்கு
புலனாகும் இறையாக வா - வழிகாட்டும்

என் பாதை முடிவாகும் உன் தாளிலே
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
உன் பார்வைகள் என் வழியாகுமோ
இருள் நீக்கும் விளக்காகவே நான்
சுடர் வீச எனை ஏற்ற வா

ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே
விண் வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பயன் தானே
நிறைவாழ்வின் விதையாகவே எங்கள்
நில வாழ்வு பயன் காண வா வழிகாட்டும்



மன்னவா உன் வாசல்

மன்னவா உன் வாசல் தேடிஓடி
நான் வந்தேன்- உன்முக‌
தரிசனம் கேட்டேன்
உன்பதம் அமர்ந்து உன்முகம் பார்த்து
உன்மொழி கேட்டால் போதுமே

அன்பு கமழும் மென்மையான அனுபவம் எல்லாம்
அழகு வாய்ந்த இனிமையான நினைவுகள் எல்லாம்
உன்னிடம் தானே பேச இயலும்-2
உவந்து எல்லாம் கூற முடியும் கூற முடியும் - மன்னவா

துன்பம் நெஞ்சில் இறக்கி வைத்த சோகச் சுமை எல்லாம்
நடந்தவைகள் அழித்துத் தகர்ந்த நம்பிக்கை எல்லாம்
புரிந்து கொள்வார் எவரும் இல்லை-2
உன்னைத் தவிர யாரும் இல்லை யாரும் இல்லை - மன்னவா

பூந்தென்றலே

பூந்தென்றலே அருளூற்றும் சுரம் பாடுதே
பூவின் அழகில் நெஞ்சம் பேசுதே - உன் அன்பைக் காணுதே

புதுராகச் சந்தத்திலே வண்டுகள் பாடும்
ஓடிவரும் ஓடை ஒலி தாளங்கள் போடும் -2
உன் அன்பின் உயரத்தையே மலைகள் சொல்லுமே
உன் அன்பின் ஆழத்தையே மலைகள் காட்டுமே
இதமான ராகங்களும் என்னில் தோன்றுமே ஓ....

கனிவான உன் முகத்தில் வெண்பனி ஒளிரும்
கண்வியக்கும் அழகுடனே தாரகை மிளிரும் -2
கடலும் வானும் அருவிகளும் உன் திறன் சான்றே
அன்பும் அருளும் பெருகிவரும் உன் திருக்கொடையே
வளமான கனவுகளும் கண்ணில் தோன்றுமே ஓ.....

Wednesday, August 20, 2008

பார்வை பெற வேண்டும்

பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்
என் உள்ளம் உன்னொளி பெற வேண்டும்- புது
பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்

வாழ்வின் தடைகளைத் தாண்டி எழும்- புதுப்
பார்வை பெற வேண்டும்
நாளும் பிறக்கும் உன் வழியை -காணும்
பார்வை தர வேண்டும்

நீதி நேர்மை உணர்வுகளை- நான்
பார்க்கும் வரம் வேண்டும்
உண்மை அன்பு உயர்ந்திடவே
உழைக்கும் உறுதி தர வேண்டும்
எல்லோரும் ஒன்றாகவே வாழும் வழி வேண்டும்
நான் பார்வை பெற வேண்டும்

நிலையில்லா உலகு

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
நிலையானதொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
நீ மட்டும் போதும் எப்போதும்
நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
நீ மட்டும் போதும் எப்போதும்

ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
ஆடி இங்கு அடங்குது வாழக்கை
வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
வசந்தம் வந்து எம்மில் என்றும் தங்கும்
நீ மட்டும் போதும்.... என் வாழ்வு மாறும் ...(2)
நீ மட்டும் போதும் எப்போதும்

பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
பொழுதிங்கு போகுது கழிந்து
உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
நீ மட்டும் போதும்.... என் வாழ்வு மாறும் ...(2)
நீ மட்டும் போதும் எப்போதும்

Saturday, August 16, 2008

சம்மதமே இறைவா

சம்மதமே இறைவா சம்மதமே தலைவா- உன்
மாலையிலே ஒரு மலராகவும்
பாலையிலே சிறு மணலாகவும்
வாழ்ந்திட சம்மதமே இறைவா
மாறிட சம்மதமே

தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே
உம் பணிக்காகவே வாழ்ந்திட வரம் அருள்வாய்(2)
கருவாக எனைப் படைத்து உயர்
கண்மணியாய் எனை வளர்த்து(2)
கரமதிலே உருப் பதித்து
கருத்துடனே என்னைக் காக்கின்றாய்

மலையாய் நான் கணித்த பெருங்காரியமும்
உயர் காவியமும் மறைந்தே போனது(2)
திருவாக உனை நினைத்து உயர்
உறவாகவே நெஞ்சில் பதித்து(2)
உன் பெயரைச் சாற்றிடவே
நலம் தரவே என்னை அணைக்கின்றாய்

ஓ என் ஆத்துமமோ

ஓ என் ஆத்துமமோ
ஏக்கமாய் இருக்கின்றது
நிலையான வான் வீடு
நுழைகின்ற தருணம் எப்போது வருமென்று?

ஆயிரமாயிரம் தூதர்கள் பாடலை
கேட்கவே துடிக்கின்றது
பன்னிரு அரியணை‌ அலங்காரத் தோற்றத்தைக்
காணவே துடிக்கின்றது

ஆனந்தம் அதுவல்லவா!
பேரானந்தம் அங்கல்லவா!

பன்னிரு விண்மீன்கள் தலையதில் சூடிய‌
அன்னையாம் மரியாளை
அவரது தலைமையில் தோன்றிடும் புனிதரை
காணவே துடிக்கின்றது

ஆனந்தம் அதுவல்லவா!
பேரானந்தம் அங்கல்லவா!

ஒரு வார்த்தை போதும்

ஒரு வார்த்தை போதும் என் இயேசுவே
என் வாழ்வு என்றும் நலமாகுமே
நினைவெல்லாம் நீயே என் இயேசுவே
காலங்கள் எல்லாம் புகழ்பாடுவேன்(2)

நலமெல்லாம் நீயே நல் வாழ்வும் நீயே
அருளன்பும் நீயே அருளொளியும் நீயே(2)
எனையாளும் இறையே இருள் நீக்கும் ஒளியே
வழித்துணையும் நீயே என் வாழ்வும் நீயே -ஒரு வார்த்தை

மாற்றங்கள் நீயே ஏற்ற‌ங்க‌ள் நீயே
ப‌ய‌ண‌ங்க‌ள் நீயே பாதைக‌ளும் நீயே(2)
போத‌னைக‌ள் நீயே சாத‌னைக‌ள் நீயே
புதுமைக‌ளும் நீயே புதுவாழ்வும் நீயே -ஒரு வார்த்தை

இயேசு எனக்கு போதும்

இயேசு எனக்கு போதும் எந்தன் வாழ்வில் நிம்மதி
எந்தக் குறையும் எனக்கு இல்லையே
இன்றும் என்றும் பாடுவேன்நெஞ்ச‌ம் ம‌கிழ்ந்து போற்றுவேன்
இர‌க்கம் அவ‌ர் திருப் பெய‌ராம்

உப்பான‌ என் நில‌ம் செழிக்க‌ வைத்த‌வ‌ர்
உண்மையின் சாட்சியாய் கிருபை த‌ந்த‌வ‌ர்
வ‌ந்த‌ புய‌ல் தென்ற‌லாக‌ மாறச் செய்த‌வ‌ர்(2)
வாக்கு மாறா தேவ‌ன் அவ‌ரே இயேசு என்ப‌வ‌ர்

வான‌த்தையே உடைத்துவிடும் வாக்கு உள்ள‌வ‌ர்
வ‌றிய‌வ‌ரை செழிப்பாக்கும் இர‌க்க‌ம் மிகுந்த‌வ‌ர்
நேர்மையுள்ள‌ ம‌க்க‌ள் ம‌ன‌தில் என்றும் வாழ்ப‌வ‌ர்(2)
எந்த‌ன் வாழ்க்கை பொருளுமாகி என்னில் இருப்ப‌வ‌ர்

என் தெய்வம் வாழும்

என் தெய்வம் வாழும் பூமியிது
எத்துணை அழகு இது
உலகே கண்கள் திறவாயோ
உவகை இன்று காணாயோ

பரந்து விரிந்த உலகம் படைத்தவன் அன்பு இதயம்
உயர்ந்து விரிந்த வானம் படர்ந்த அவர்மனம் கூறும்
எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும்
பொங்கிடும் நீரின் ஊற்றும்
மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும்
மின்னலும் தன்னொளி நிலவும்
என்னென்ன அழகு ....எங்கெங்கும் மெருகு(2)
இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப்பருகு - என் தெய்வம்

நிறைந்த அன்புடை நெஞ்சம் நிலவென ஒளிதரும் அறிவும்
மலர்ந்த முகந்தனின் அழகும் மங்கா கலைகளின் வளமும்
என்றென்றும் உழைக்கும் தன்மான மாந்தர்
எங்கெங்கும் ஒன்றாகும் கரங்கள்
நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் குணங்கள்
நிம்மதி தேடிடும் மனங்கள்
என்னென்ன அழகு..... எங்கெங்கும் மெருகு(2)
எழில் கண்டு வணங்கு இன்பம் அள்ளிப்பருகு - என் தெய்வம்

உன் சிறகுகள் நிழலில்

உன் சிறகுகள் நிழலில்
எந்நாளும் என்னை
அரவனைத்திடி இறைவா

அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண்தணலிலும் மனம் குளிரும்
உந்தன் கண்களின் இமைபோல்
எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா

பாவங்கள் சுமையாய் இருந்தும்
உன் மன்னிப்பில் பனி போல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால்
உன் ஆலயம் புனிதம் அருளும்

வலையினில் விழுகின்ற பறவை
அன்று இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே- நீ
வளர்த்திடு அன்பதன் உறவை

இன்பக் கனவொன்று

இன்பக் கனவொன்று நான் கண்டேன்
இறையாட்சி மலரக் கண்டேன்
எங்கும் ம‌ன‌ங்க‌ள் ம‌கிழ‌க் க‌ண்டேன்

இயேசுவின் அருகினில் ஏழைக‌ள் அம‌ர‌க் க‌ண்டேன்- இறை
அன்பினில் அகில‌மே ஒன்றென‌ உண‌ர்ந்து நின்றேன்
பிற‌ர்க்கென‌ வாழ்ந்திடும் ம‌னித‌ர்க‌ள் ப‌ல‌ரைக் க‌ண்டேன்
பிற‌ர்ந‌ல‌ம் பேணிடும் ப‌ணியில் எனை இணைத்தேன்
எந்த‌ன் வாழ்வின் பொருள் அறிந்தேன்

அன்பே அனைவ‌ர்க்கும் ஆக்க‌ம் என அறிந்தேன்- அக‌ச்
சுத‌ந்திர‌மே எங்கும் ஒளியென‌க் க‌ண்டு கொண்டேன்
நீதியின் பாதையில் யாவ‌ரும் ந‌ட‌க்க‌க் க‌ண்டேன்
நித‌மும் புதுமை வ‌ழ்வில் சேர‌க் க‌ண்டேன்
அன்பினில் நிறைவை நான் க‌ண்டேன்

இயேசுவே என்னுடன்

இயேசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதைக் கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து

உன்திரு பெய‌ர் நான் பாடிடும் கீத‌ம்
உன்திரு இத‌ய‌ம் பேரான‌ந்த‌ம்
உன் திரு வாழ்வெம‌க்க‌ருளும்- இறைவா
உன்திரு நிழ‌லில் நான் குடிகொள்ள‌
என்றும் என்னுட‌ன் இருப்பாய்

இயேசுவில் பெய‌ருக்கு மூவுல‌கென்றும்
இணைய‌டி ப‌ணிந்து த‌லை வ‌ண‌ங்கிடுமே
இயேசுவே உன் பெய‌ர் வாழ்க‌ வாழ்க‌
இயேசுவே உன் புக‌ழ்- வாழ்க‌
இயேசுவே நீ என் இத‌ய‌த்தின் வேந்த‌ன்
என்னை த‌ள்ளிவிடாதே

இயேசுவின் சீடராய்

இயேசுவின் சீடராய் வாழ இனியவழி அது அன்பு வழி
இடர் பல எதிர்வரும் போதும்
அவர் வழி வாழ்ந்திட உதவும்
அன்பு அது அன்பு அன்பு அது அன்பு....(2) இயேசுவின்

மலைகளை பெயர்த்திடும் வலிமையும்
பல மொழி பேசும் திறமையும்
எமக்கிருந்தாலும் பயனில்லை என்
இயேசுவைத் தொடர்ந்திடும் வழியில்லை
இதயங்களை இணைக்கின்ற‌
இனிய மொழி இருக்கின்றது
அன்பு அது அன்பு அன்பு அது அன்பு....(2) இயேசுவின்

இறைவாக்கு வ‌ர‌ம் என‌க்கிருந்தாலும்
ம‌றைபொருள் யாவும் தெரிந்தாலும்
அறிவு வ‌ர‌ம் இருந்தாலும்
அதுவும் ஒருநாள் அழிந்து விடும்
விசுவாச‌ம் ந‌ம்பிக்கை அன்பு
இத‌ன் விலையாய் இருப்ப‌து ஒன்று
அன்பு அது அன்பு அன்பு அது அன்பு....(2) இயேசுவின்

இறையாட்சி மலர

இறையாட்சி மலர வேண்டும்
புது வாழ்வு புலர வேண்டும்(2)
வார்த்தை மனுவாக‌
இங்கு நீதி நிலைக்க வேண்டும்(2)
நிலை மாறுமா கரம் சேருமா
வலுவாகுமா துயர் மாறுமா
நிலை மாறுமே கரம் சேருமே
வலுவாகுமே துயர் மாறுமே(2)
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்

பாலும் தேனும் பொழிந்திடுமே
கானான் க‌ன‌வு ப‌லித்திடுமே
பாறை த‌ண்ணீர் சுர‌ந்திடுமே
ம‌ன்னா ந‌ம‌து த‌ரை விழுமே
பாலை நில‌ங்க‌ள் யாவும் இனி
ப‌சுமை நிற‌ங்களாகும்(2)
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்- இறையாட்சி

சிங்க‌மும் க‌ன்றும் தோழ‌மையில்
சிறுவ‌ர் ந‌ட்பும் பாம்ப‌ருகில்
வேலும் வாளும் ஏர்முனையில்
துனிக்கிக‌ள் எல்லாம் பூம்பொழிவில்
பாழும் ம‌ன‌ங்க‌ள் யாவும் இனி
பாச‌ம் நிறைந்த‌தாகும்(2)
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்- இறையாட்சி

ஆயராம் என் ஆண்டவர்

ஆயராம் என் ஆண்டவர் குறையேதும் எனக்க்கில்லையே
பசும்புல் வெளிதனில் இளைப்பாறவே செய்கிறார்
நீர் நிலை அழைத்துச் சென்று புத்துயிர் அளிக்கிறார்
தம்பெயர் கேற்பவே நீதிவழி நடத்துவார்

சாவின் இருளினிலே நான் நடந்திட நேர்ந்தாலும்
உம் துணை இருப்பதனால் அஞ்சிடத் தேவையில்லை
உம் கரக் கோலும் உறங்கா விழியும்
என்னைத் தேற்றிடுமே
உன் விழி ஓரப் பார்வையே போதும்
தீமைகள் அகன்றிடுமே - ஆயராம்

எதிரிகள் கண்முன்னே எனக்கு விருந்து தருகின்றீர்
பாத்திரம் நிரம்பிடவே தலையில் தைலம் பூசுகிறீர்
வாழ்ந்திடும் நாளெல்லாம் உம் அருள் நலமும்
பேரன்பும் புடை சூழும்
ஆண்டவர் இல்லம் நெடுநாள் வாழ்வேன்
அருட்கரம் எனைத் தேற்றும் - ஆயராம்

Wednesday, August 13, 2008

ஆண்டவரை நான்

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன்(2)

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவ‌ர் புக‌ழை நாளும் பாடிடுவேன்(2)
என் ஆன்மா அவ‌ரில் பெருமை கொள்ளும்(2)
எளிய‌வ‌ர் அதைக் கேட்டு ம‌கிழ்வாராக‌(2)-ஆண்ட‌வ‌ரை

ஆண்ட‌வ‌ரை ந‌ம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்ட‌வ‌ர் தூத‌ர் என்றும் காத்திடுவார்(2)
ஆண்ட‌வ‌ர் எவ்வ‌ள‌வோ இனிய‌வ‌ரே(2)
என்று சுவைத்துப் பாருங்க‌ள்
சுவைத்துப் பாருங்க‌ள்(2)-ஆண்ட‌வ‌ரை


அன்பினில் அகிலம்

அன்பினில் அகிலம் வாழ்ந்திட- உம்
அமைதியின் தூதனாய்
என்னை மாற்றுமே இறைவனே- எனை
மாற்றுமே தலைவனே

பகைமை உணர்வால் வாடும் மனதை
பாசம் கொண்டு மாற்றவே
வேதனை சுமந்து செல்லும் மனதில்
மனப் புண்கள் ஆற்றவே
ஐயம் கொண்டு வீழும் நேரம்
நம்பிக்கை தந்து வாழவே என்
இறைவனே அருளுமே- என்
தலைவனே அருளுமே

ஆறுதல் தேடி அலைந்திடாமல்
துணையாய் நின்று வாழ்ந்திட‌
பிறரை என்றும் ஏற்று வாழ்ந்து
உறவில் நாளும் வளர்ந்திட‌
எனையே முழுதும் வழ்ங்கி நாளும்
வாழ்வில் முழுமை அடைந்திட என்
தலைவனே அருளுமே- என்
தலைவனே அருளுமே

அஞ்சாதே ஆண்டவர்

அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க‌
நெஞ்சோடு நிததம் அவர் நினைவிருக்க(2)
உன் தாயின் உதிரத்தில் உனைத் தெரிந்தார்
உன் வாழ்வின் உறவாய் உன்னில் நிறைந்தார்- அஞ்சாதே

தீயின் ந‌டுவில் தீமை இல்லை
திக்க‌ற்ற‌ நிலையில் துய‌ர‌ம் இல்லை
தோல்வி நில‌யில் துவ‌ண்டு வாழும்
துன்ப‌ம் எதுவும் தொட‌ர்ந்திடாது
காக்கும் தெய்வ‌ம் கால‌மெல்லாம்(2)
க‌ர‌த்தில் தாங்கிடுவார்- அன்பின்
க‌ர‌த்தில் தாங்கிடுவார்-அஞ்சாதே

தூர‌ தேச‌ம் வாழ்க்கை ப‌ய‌ண‌ம்
தேவ‌ நேச‌ம் உன்னைத் தொட‌ரும்
பாவ‌ம் யாவும் ப‌ற‌ந்து போகும்
ப‌ர‌ம‌ன் அன்பில் ப‌ண்பைப் போல‌
வாழும் கால‌ம் முழுதும் உன்னில்(2)
வ‌ச‌ந்த‌ம் வீசிடுமே- அன்பின்
வ‌ச‌ந்த‌ம் வீசிடுமே -அஞ்சாதே

விடுதலை ராகங்கள்

விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்
முழங்கிட வாருங்களே
புது உலகமைத்திட புது வழி படைத்திட‌
அன்புடன் வாருங்களே
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே

அன்புக்காகவும் அமைதிக்காகவும்
இயேசு மனுவானார்
உண்மைக்காகவும் நீதிக்காகவும்
அவரே பலியானார் அன்புக்காகவும்
ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம்
சுயநலம் நீக்கி பிறர் நலம் காத்து
அன்பினில் நாம் இணைவோம்

ஏழை எளியவர் வாழும் இடங்களே
இறைவன் வீடாகும்
வறுமை பிடியிலே அலறும் குடில்களே
இறைவன் மொழியாகும்
பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம்
இறைவனின் அரசின் இனிமையைக் காண‌
இன்றே முயன்றிடுவோம்

வாருங்கள் அன்பு மாந்தரே

வாருங்கள் அன்பு மாந்தரே
பலி செலுத்த வாருங்கள்
பண் இசைத்துப் பாடுங்கள்
வாருங்கள் அன்பு மாந்தரே

இயேசு என்னும் ஆதவன் கதிர் விரிக்கக் காணுங்கள்
இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள்
ஆசை என்ற இருள் மறைத்து அன்பு உதயமாகவே-2
அருள் வளங்கள் இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்

அன்பு என்றால் என்னவென்று அவரைக் கேட்டுப் பாருங்கள்
அத்தனையும் தருவதுதான் அன்பு என்று கூறுவார்
தன்னை ஈந்து அன்பு செய்த தேவன் இங்கு வருகின்றார்-2
நம்மை முற்றும் தந்து இன்று யாவும் பெற்றுத் திரும்புவோம்

புத்தொளி வீசிட

புத்தொளி வீசிட பூமணம் கமழ்ந்திட‌
புதிய நாள் பிறந்தது
அருளொளி தோன்றிட அகமெங்கும் சூழ்ந்திட‌
புனித நாள் மலர்ந்தது(2)
புதிய மனம் கொண்டு பினித பீடன் சென்று
தூயவர் பலியில் கலந்திடுவோம்-2- புத்தொளி

இறைவன் நம்மை அழைத்ததால் நாமும்
இறைவனின் பிள்ளைகள் ஆனோம்
இறைவன் நம்மைத் தேர்ந்ததால் அரசக்
குருத்துவ திருக்கூட்டம் ஆனோம்
பறை சாற்றுவோம் அவர் புகழை
பாரெங்கும் ஒலிக்கச் செய்வோம்-2
வாருங்கள் வாருங்கள் இறைவனைப் புகழ்வோம்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனில் மகிழ்வோம்-2

இறைவனின் அன்புச் செயலினால் நாமும்
அவரது உடமைகள் ஆனோம்
இறைவனின் அன்பு வார்த்தையால் அருள்
அருவியில் நனைந்தவராவோம்
அணுகிச் செல்வோம் அவர் பாதம்
அழியாத வார்த்தை கேட்போம்-2
வாருங்கள் வாருங்கள் இறைவனைப் புகழ்வோம்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனில் மகிழ்வோம்-2

புது வாழ்வில்

புது வாழ்வில் வசந்தம் பொங்கிடவே நாம் ஒன்றாய் சேரும் நேரம்
இனி வாழும் காலம் எல்லாம் இன்பம் நம்மில் பெருகிடவேண்டும்
இறைவனின் சங்கமத்தில் நாம் ஒன்றாய் கூடிடுவோம்(2)
பலியினில் கலந்திட இணைந்திடுவோம் - நல்
பகிர்வினை வளர்த்திட முனைந்திடுவோம் - புது

பாடும் அந்த பறவைகள் கூட்டம் பரமனைப் புகழ்ந்திடுதே
நீங்களும் தேவனைப் புகழ்கையிலே அது தேனாய் இனிக்கிறதே(2)இயற்கையோடு நாமும் சேர்ந்து இறைவனைப் புகழ்ந்திடுவோம்(2)
இதயம் மீட்டும் இன்னிசைப் பாடி இறையடி புகுந்திடுவோம்

வெள்ளிமணி போல் பனித்துளி நீரால் புல்வெளி நனைகிறதே
மென்மையான் பூவின் இதழில் தேனும் சுரக்கிறதே(2)
உண்மையான் உந்தன் அன்பால் உள்ளம் நிறைகின்றதே(2)
உன்னில் இணையும் உறவில் வாழ்ந்தால் உலகம் இனிக்கிறதே

நீங்களே உயிருள்ள

நீங்களே உயிருள்ள இறைவனின் ஆலயங்கள்
நீங்களே இயேசுவை மூலைக்கல் ஆக்கியவர்
நீங்களே இயேசுவின் நற்செய்தி சொல்லும் சாட்சிகள்(2)

கனிதரும் திரட்சை கொடி அவரே
கிளைகளாய் இணைந்து கனி தருவோம்
களைகள் எல்லாம் களைந்து விட்டால்
கனிதரவே கொஞ்சம் கழித்து விட்டால் - நீங்களே

இயேசுவைத் தலையாய் தாங்கிடுவோம்
உயிருள்ள உறுப்புக்கள் ஆகிடுவோம்
சாதிகளை ஒழித்து விட்டால்
சமத்துவத்தை சமைத்து விட்டால் - நீங்களே

உறவினில் உயிர் பெறும் ஆன்மீகம்
இயேசுவின் தலைமையில் மலர்ந்திருக்கும்
பிரிவினைகள் அறுத்து விட்டால்
பேதமைகள் அழித்து விட்டால் - நீங்களே

நன்மைகள் செய்த

நன்மைகள் செய்த இறைவனுக்கு
நன்றியின் பலியை செலுத்திட வாரீர்(2)
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்

உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்
உடைந்ததென்றால் அது வெறும் பலியாம்(2)
கொடைகள் பெறுவது தகும் வழியாம்(2)
குறையினைப் போக்கும் கோ வழியாம்

வானத்தை நோக்கிடும் நறும்புகை போல்
வாருங்கள் உள்ளத்தை எழுப்பிடுவோம்(2)
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம்(2)
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்

தீபத்தின் ஒளியினில்

தீபத்தின் ஒளியினில் இணைவோம்
திருப்பலி செலுத்திட விரைவோம்
புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்ந்திட‌

நல்வாழ்வின் தீபங்களாய் -இங்கு
நாளெல்லாம் ஒளிர வாருங்களே
நல் வாழ்வின் தேவைகளை- நிதம்
நல்லோர்க்கு இயேசு தந்திடுவார்
அவரின் இல்லம் தினம் வந்தால்- நம்
உள்ளங்கள் ஒளியால் நிறைந்திடுமே(2)
அன்பு செய்யும் உள்ளங்களே
இறைவனின் அருட்பெரும் இல்லங்களே

இயேசுவோடு நாம் நடந்தால்- என்றும்
நம் வாழ்வில் தோல்விக்கு இடமில்லையே
நன்மை செய்து நீ மகிழ்ந்தால்- இங்கே
உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே
வார்த்தை இங்கு மனுவானார்- நம்
வாழ்வினில் என்றும் குடி கொண்டார்(2)
அன்பு செய்யும் உள்ளங்களே
இறைவனின் அருட்பெரும் இல்லங்களே

ஒளியில் நடந்து வா

ஒளியில் நடந்து வா சகோதரா
ஒளியில் நடந்து வா சகோதரி
ஒளியாம் கிறிஸ்துவில் நடந்துவா
வழியாம் கிறிஸ்துவில் நடந்துவா
இயேசு நம் ஒளி....(3)

அவரில் வாழ்ந்தால் இருளில்லை
அவரில் வாழ்ந்தால் பாவமில்லை(2)
மீட்கும் தேவன் அவரன்றோ(2)
மன்னிக்கும் இறைவன் அவரன்றோ

அவரில் வாழ்ந்தால் வறுமையில்லை
அவரில் வாழ்ந்தால் துன்பமில்லை(2)
நிரப்பும் தேவன் அவரன்றோ(2)
இன்பத்தின் இறைவன் அவரன்றோ

உன் நினைவில்

உன் நினைவில் உன் திருமுன் சங்கமிப்பேன் - உன்
துணையோடு நாளெல்லாம் பண்ணிசைப்பேன்
என் இயேசுவே....என் ஜீவனே
துணையாகி எனையாளும் தேவ தேவனே
ஸரிகமப....கமபதப....பதப...பதப...பதநிஸ‌
ஸரிஸ.... ஸரிஸ...ஸரிகரிஸா

அலைபோல சோகங்கள் தினந்தோறும் வந்தாலும்
அரண் போல எனைக்காக்கும் என் தெய்வமே(2)
மலை போல பாவங்கள் மனதுக்குள் இருந்தாலும்
மறவாமல் மன்னிக்கும் மாமன்னன் நீ
எந்நாளுமே என் இயேசுவே
என் வாழ்வெல்லாம் உன் தாயன்பிலே- உன் நினைவில்

செல்கின்ற இடமெல்லாம் சொல்கின்ற மொழிகேட்டு
நல்வாழ்வில் உனைக்காணும் வரம் ஒன்று தா(2)
தாழ்ந்தோர்க்கும் வீழ்ந்தோர்க்கும் நற்செய்தி நானாகி
நல்லோராய் மாற்றுகின்ற வாழ்வொன்று தா
உன் வார்த்தையால் உளம் மாற்ற வா
உன் பார்வையால் என்னை குணமாக்க வா- உன் நினைவில்

Monday, August 11, 2008

உறவில் மலர்ந்து

உறவில் மலர்ந்து உள்ளத்தில் இணைந்து
உதய தீபமாக வருகின்றோம்
உரிமை வாழ்வு வழங்கிட- புது
மனிதராக வருகிறோம்- உறவில்
வருகின்றோம் மலையென வருகின்றோம்
பலி பீடமேறி வருகின்றோம்
பலியாக வருகின்றோம்

தந்தையின் அரசை தரணி முழுதும் முழங்கிட- முழங்கிட‌
தலைவன் இயேசு வழியில் நடந்திட- நடந்திட‌(2)
சமத்துவம் நிறைந்த உலகைக் காண‌
சகோதர உணர்வில் ஒன்றாய் வாழும்
அருளையே நிறை அன்பையே
நாளும் வேண்டி வருகின்றோம்
வருகின்றோம் மலையென வருகின்றோம்
பலி பீடமேறி வருகின்றோம்
பலியாக வருகின்றோம் -உற‌வில்

உய‌ர்வு தாழ்வு பிரிவினைக‌ள் அக‌ன்றிட‌- அக‌ன்றிட‌
உண்மை அன்பு உல‌கில் ப‌ர‌விட‌- ப‌ர‌விட‌(2)
வ‌றிய‌வ‌ர் வாழ்வில் உய‌ர்வைக் காண‌
எளிய‌வ‌ர் துன்ப‌ம் என்றும் நீங்க‌
அருளையே நிறை அன்பையே
நாளும் வேண்டி வ‌ருகின்றோம்
வருகின்றோம் மலையென வருகின்றோம்
பலி பீடமேறி வருகின்றோம்
பலியாக வருகின்றோம் -உற‌வில்

இரக்கம் நிரம்பும்

இரக்கம் நிரம்பும் இறையருட்காலம்
ஒப்புரவில் உறவே காணும்
ஆற்றல் தரும் வசந்த காலம்
அருள் மிகும் நிம்மதி சேரும்
மனம் குணம் இறைநெறி காணும்

மனிதனாக மாறிட மனமாற்றம் தேவையே
இதயத்தை நாம் கிழித்திடுவோம் புத்துயிர் பெறுவோம்-2
இறையரசின் காலம் மிக அருகில் உள்ளது-2
நற்செய்தி கேட்டு நாமும் திருந்தி வாழ்வோம்
ஜெபமும் தவமுமே தினமும் செய்யவே
வளமும் வரங்களும் பெருகி வருகுதே-2

உலகை மாற்ற எண்ண வேண்டாம் நம்மை மாற்றுவோம்
முழுமனித வாழ்க்கையே இறைமகிமை என்போம்-2
தன்னலங்கள் மறந்து பிறர் வாழ உழைப்போம்-2
தரணி வந்த தலைமகனின் தலைமையில் செல்வோம்
அமைதி தூதனாய் அன்பின் கருவியாய்
விண்ணின் மைந்தனாய் மண்ணில் மலருவோம்-2

இறைமக்கள் அகமகிழ்ந்து

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி(2)
திருச்சபை இனைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி
வாராய் இறைதிரு குலமே வாழ்வாய் பேறுடனே(2)

மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே(2)
புவிவாழ்வை நாமும் தரவே இறை மாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் - வாராய்

ம‌கிழ்வுட‌ன் பாடும் வேளையில் ம‌ன‌ங்க‌ளின் சோர்வை நீக்குமே(2)நிறைவாழ்வை தேடி பெறுவோம் ம‌றைவாழ்வின் ந‌ன்மை அடைவோம்ப‌ணிவாய் குல‌மாய் இயேசு ப‌த‌ம் இணைவோம்ம‌றையின் வ‌ழியில் தேவ‌ ஒளி பேறுவோம் - வாராய்

இறையாட்சியின் மனிதர்களே

இறையாட்சியின் மனிதர்களே
மரி மைந்தனின் சீடர்களே
இறை அழைக்கின்றார் அன்பில் இணைகின்றார்
புது உலகொன்றை படைத்திட வாருங்களே

நாம் வாழும் இந்த பூமி
நலமாகிட வேண்டாமா
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி
நின்று நிலைத்திட வேண்டாமா(2)
இயேசுவே காட்டிய வழியுண்டு
இயங்கிட நமக்கொரு நெறியுண்டு
எதிர் நோக்குடன் வாருங்கள்
கதிர் விளைந்திடும் காணுங்கள்

இன்று மானிட இதயங்களெல்லாம்
ஒன்று சேர்ந்திட வேண்டாமா
இறை மாட்சியின் மாற்றங்கள் எங்கும்
நிறைவேறிட வேண்டாமா(2)
மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம்
மாந்தர்கள் எல்லாம் உடன் பிறப்பே
இந்த உண்மையை வாழ்ந்திடுவோம்
எந்தப் பகையினும் வென்றிடுவோம்

கடவுளே நாங்கள் வருகின்றோம்
கவினூறு உலகம் படைத்திடவே
கரம் கோர்த்தே சென்றிடுவோம்
கருத்துடன் செயல்படவே(2)

இயேசுவின் சந்நிதியில்

இயேசுவின் சந்நிதியில் மகிழ்வோம் வாருங்கள்
என் தேவனில் நம் இயேசுவில் இணைந்து மகிழுங்கள்-2

சந்தங்கள் பல வண்ணங்கள்- உந்தன்
பந்தங்கள் தினம் பாடுவேன்
எண்ணங்கள் சங்கீதங்கள் என்றும்
என் இன்ப சுக ராகங்கள்
நீ செய்த நன்மைகள் என் வாழ்வின் விடியல்கள்
என்றென்றும் நான் பாடுவேன்

காலங்கள் பல நாளுமே- உந்தன்
கனிவான அருள் தாருமே
தாகங்கள் இனி மாறுமே என்றும்
என் ஆன்ம குறை தீருமே
என் ஆயுள் காலங்கள் உன் அன்பில் நான் வாழ‌
என் இல்லம் தங்கிடுவாய்

இயேசு என்னும்

ஆண்டவரின் அருள் பிரசன்னம்
அன்புடனே நம்மை காக்கும் பிரசன்னம்
தேடிடும் மக்களை தேற்றிடும் இறை பிரசன்னம்
இதுவே நம்மை மீட்கும் பிரசன்னம்

இயேசு என்னும் திருப்பெயரை சொல்லும்போதிலே
இன்பம் வந்து பாயுதம்மா நமது வாழ்விலே-2
பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் இயேசு பிரசன்னம்-2

விண்ணில் வாழும் இறைவன் நமது தந்தையாவதால்
மண்ணில் நமது மனங்களிலே வாழ்ந்து வருவதால்(2)
காண்பது காண்பது தேவன் இயேசு திவ்ய பிரசன்னம்
உரிமையிலே அப்பா தந்தாய் என்றழைப்பதால்
அனைவருமே அவரின் அன்பு பிள்ளையாகிறோம்(2)
புலரும் காலைப் பொழுதில் பொதிகைத் தென்றல் போல‌
இயேசு வாழ்வதாலே இனிமை.....இனிமேல் இனிமை....

இருவர் மூவராக நாமும் கூடி வருவதால்
இதயம் திறந்து வாஞ்சையுடன் பாடி ஜெயிப்பதால்(2)
உணர்வது உணர்வது இயேசு தரும் இன்ப பிரசன்னம்
ஜாதி பேத களைகளை நாம் கடந்து செல்வதால்
கிறிஸ்துவுக்குள் ஓரினமாய் உரிமை கொண்டதால்(2)
புதிய உலகம் காண்போம் புனித பயணம் செய்வோம்
இயேசுவோடு நடந்தால் இல்லை....பகைமை இல்லை.....

ஆலயத்தில் நாம்

ஆலயத்தில் நாம் நுழைகையிலே- புது
நினைவுகள் எழுகின்றன அந்த‌
நினைவுகளின் புது வருகையிலே -நம்
நெஞ்சங்கள் நிறைகின்றன் ஆ...

அன்பான மகனை பலி கொடுத்த‌
அபிரகாம் இங்கே தெரிகின்றார்(2)
பண்பான ஆட்டினை பலி ஈந்த‌
ஆபேலும் இங்கே தெரிகின்றார்

எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்
ஏசுவும் அங்கே மொழிந்தாரே(2)
என் வீடு இது என் ஜெப வீடு
வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்

Saturday, August 9, 2008

அற்புத அன்பரின்

அற்புத அன்பரின் அடிதொழவே
அவரின் பாதம் அணி திரள்வோம்
இத்தனை இகம் வாழ் உயிர்களுமே
இயேசுவை வணங்கிடுமே(2)

ஆலய மணியின் ஓசையைக் கேட்போம்
ஆயனே நம்மை கூப்பிட கேட்போம்
ஆவியின் அருளால் அற வழி நடப்போம்
அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம்
அன்பினில் இணவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம்.... நாம்.....(2)

ஆலயக்கதவு திறந்திடப் பார்த்தோம்
ஆண்டவன் சந்நிதி வணங்கியே நின்றோம்
அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்
அவரின் அருளால் ஆறுதல் அடைவோம்
அன்பினில் இணவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம்.... நாம்.....(2)

அன்பு மாந்தர்

அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்
இறைவன் அழைப்பை ஏற்று அவரில் மகிழுங்கள் - இறையர‌சின்

இயேசுவில் நாமும் வாழ்ந்திட‌ வேண்டும்
அவ‌ரின் பாதையிலே நாம் ந‌ட‌ந்திட‌ வேண்டும்(2)
அருளில் ந‌னைந்திட‌ வேண்டும்
அன்பில் வ‌ள‌ர்ந்திட‌ வேண்டும்- என்றும்
உற‌வில் இணைந்து ம‌கிழ்ந்து வாழ‌ வேண்டும்(2)

ஆவியின் வ‌ர‌ங்க‌ள் நாம் பெற‌ வேண்டும்
அவ‌ரின் ஆற்ற‌லோடு ப‌ணிபுரிய‌ வேண்டும்(2)
ம‌னித‌ம் ம‌ல‌ர்ந்திட‌ வேண்டும்
புனித‌ம் அடைந்திட‌ வேண்டும்- என்றும்
இறைவன் அர‌சு ம‌ண்ணில் நிலைக்க‌ வேண்டும் (2)

அன்பர் இயேசு

அன்பர் இயேசு அருகிலிருக்க‌
எந்த துன்பம் நமக்கில்லை
உண்மை தெய்வம் நமக்குள் இருக்க
பயமு மில்லையே(2)
ஒன்று கூடுவோம் சேர்ந்து வாழ்வோம்
இறைவன் ஆட்சி மண்ணில் அமைப்போம்(2)

பயணம் தூரம் சென்றாலும் பயங்கள் இல்லையே
பாதை தடுமாறினாலும் கவலை இல்லையே(2)
நம் ஆயன் நம்மோடு இருக்கின்றபோது
அன்போடு தோளில் நம்மைத் தாங்கிக்கொள்கிறார்(2)
ஒன்று கூடுவோம் சேர்ந்து வாழ்வோம்
இறைவன் ஆட்சி மண்ணில் அமைப்போம்(2)

சொந்த‌ ப‌ந்த‌ம் அழிந்தாலும் த‌னிமையில்லையே
நோய்க‌ள் ந‌ம்மி அழித்தாலும் ம‌ர‌ண‌ம் இல்லையே(2)
ந‌ம் இயேசு ந‌ம்மோடு இருக்கின்ற‌போது
வாழ்வாக‌ ந‌ம்மை என்றும் நிறைவு செய்கிறார்(2)
ஒன்று கூடுவோம் சேர்ந்து வாழ்வோம்
இறைவன் ஆட்சி மண்ணில் அமைப்போம்(2)

Friday, August 8, 2008

அமைதியைத் தருவது

அமைதியைத் தருவது ஆலயம்
ஆறுதல் தருவது ஆலயம்
அடைக்கலமாகும் அத்தனை பேருக்கும்
அருள் தரும் இயேசுவின் ஆலயம்
ஆலயம்...ஆலயம்...ஆலயம்

நிம்மதி தேடும் மனிதர்களே நீங்கள்
இயேசுவை நாடுங்கள்
துன்பத்தில் தவிக்கும் உள்ளங்களே- அவர்
துணையைத் தேடுங்கள்
குறைகளைக் கூறி நிறைகளை கேட்டால்
கொடுக்கும் அவர் கரங்கள்
தடைகளை உடைத்து துயரத்தைத் துடைத்து
தருவார் பல வரங்கள்
அன்பெனும் பூச்சரங்கள்- தினம்
பொழிவது அவர் குணங்கள்
ஆனந்த வாழ்க்கை அனைவரும் வாழ‌
அவரிடம் வாருங்கள்- அமைதியை

ஏசுவின் ஆல‌ய‌ம் வ‌ர‌ வேண்டும்- என்ற‌
எண்ண‌ங்க‌ள் பிற‌ந்தாலே
இத‌ய‌த்தை அழுத்திடும் பார‌மெல்லாம்- இங்கு
வில‌கிடும் த‌ன்னாலே
மனித‌ நேய‌த்தை ம‌ன‌தில் வ‌ள‌ர்ப்ப‌து
ம‌ரிம‌க‌ன் ஆல‌ய‌மே- இங்கு
வேற்றுமை நீங்கி ஒற்றுமை தீப‌ம்
ஏற்றிடும் ந‌ம் ம‌ன‌மே
ஆல‌ய‌ ம‌ணியோசை- ந‌ம்மை
வாழ்த்திடும் அருளோசை
ஆல‌ய‌ வாச‌லில் கால‌டி வைத்தால்
அமைந்திடும் ந‌ல் வாழ்க்கை -அமைதியை

அழைக்கும் இறைவன்

அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்
அனைத்தும் அவரின் சங்கமமாக விரைந்து வாருங்கள்
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே(2)
படைத்த இறவன் புகழை பரப்ப பணிந்து வாருங்கள்- அழைக்கும்

பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவ‌ன் அழைக்கின்றார்(2)
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே(2)
படைத்த இறைவன் புகழை பரப்ப பணிந்து வாருங்கள்- அழைக்கும்

வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார்(2)
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே(2)
தூய தேவன் நம்மி அழைக்க விரைந்து வாருங்கள்- அழைக்கும்

அர்ச்சனை மலராக

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட‌
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம் -அர்ச்சனை

தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே
பாவியாயினும் பச்சைப் பிள்ளையாயினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராக புனிதராக வாழ பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வை கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதே என்று என்னைக்காத்து வருகின்றீர் - அர்ச்சனை

உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதை ஆக்கினீர்
உமது மாட்சியை எங்கும் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் செய்கின்றீர்
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்ட்ம் தீட்டினீர்
அஞ்சாதே என்று என்னைக்காத்து வருகின்றீர் - அர்ச்சனை

Sunday, August 3, 2008

அருட்கரம் தேடி

அருட்கரம் தேடி உன் ஆல‌ய‌ பீட‌ம்
அலை அலையாக‌ வ‌ருகின்றோம்
அருவியாய் வ‌ழியும் உன் அருளினில் ந‌னைய‌
ஆன‌ந்த‌மாக‌ வ‌ருகின்றோம்

ஆயிர‌ம் ஆயிர‌ம் ஆசைக‌ளால்
ஆடிடும் ஓட‌மாய் என் வாழ்க்கை(2)
மூழ்கிடும் வேளையில் என் த‌லைவா
உன் க‌ரம் தானே எம்மை க‌ரை சேர்க்கும்- பெரும்
புய‌லோ எழும் அலையோ நித‌ம் வ‌ருமோ ஒளி இருக்க
‌நாளுமே எம்மை காத்திடும் உந்த‌ன்- அருட்கர‌‌ம்

ஆறுத‌ல் தேடும் இத‌ய‌ங்க‌ளோ
அன்பினைத் தேடி அலைகின்றது(2)
தேற்றிட‌ விளையும் எம் த‌லைவா உம்
தெய்வீக‌ க‌ர‌ம்தானே எமைத் தேற்றும்- புதுப்
பிணியோ வ‌ரும் பிரிவோ துய‌ர் த‌ருமோ துணையிருக்க
‌நாளுமே அன்பாய் காத்திடும் உந்த‌ன்- அருட்க‌ர‌ம்