![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-H9UqNw_vEOfpEgKHmpk6UHfFCuEycgU-DUPxw0jeSH65aD8MHcy6MjjzztLJlkqvefGr4oagH3U40wbqCiw-MQJwxSrGjR-Cy6G-bVM9HFn_d5iee2zRH15_M_6X8SsX88gsJ-47RhA/s320/anpin+paliyaay+erpaay.bmp)
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்(2)
புண்படும் மனதின் துயர் தீர்ப்பாய்- எம்மை
புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்
வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம்- அருள்
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம்
முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் எம்மை
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்
படைப்பின் மீதே பரிவிருக்க- அந்தப்
பரிவால் உன்மகன் உயிர் கொடுக்க
படைப்பே உம்மால் மகிழ்ந்திருக்க- உம்மில்
படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க