Saturday, April 4, 2009

இயேசுவே என்னுடன்

இயேசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதை கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து

உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம்
உன் திரு இதயம் பேரானந்தம்
உன் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா
உன் திரு வாழ்வெனக்கருளும்
உன் திரு நிழ‌லில் நான் குடி கொள்ள
என்று என்னுட‌ன் இருப்பாய்

இயேசுவின் பெய‌ருக்கு மூவுல‌கென்றும்
இணைய‌டி ப‌ணிந்து த‌லை வ‌ண‌ங்கிடுமே
இயேசுவே உன் பெய‌ர் வாழ்க‌ வாழ்க‌ வாழ்க‌
இயேசுவே உன் பெய‌ர் வாழ்க‌
இயேசுவே நீ என் இத‌ய‌த்தின் வேந்த‌ன்
என்னைத் த‌ள்ளி விடாதே

No comments: