பணிகள் புரிய வந்தாய் சீடர்
பாதம் கழுவி பணிந்தாய்
அன்பை வளர்க்கும் உறவாய் இயேசு
தன்னை ஈந்தார் உணவாய் -பணிகள்
தொட்டதும் தீர்ந்தது தொழுநோய்
சொல்லைக் கேட்டதும் அகன்றது அலகை
கேட்டதும் பலுகிய தப்பம் அதைப்
பகிர்ந்ததும் நின்றது பசியே.....
அழைத்ததும் பிறந்தது மாற்றம் அவர்
ஜெபித்ததும் வந்தது உயிரே
மன்னிப்பும் தந்தது மகிழ்ச்சி
அதை உணர்ந்ததும் கனிந்தது வாழ்வே......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment