Tuesday, September 30, 2008

பாடுவாய் எந்தன் நாவே

பாடுவாய் எந்தன் நாவே மாண்புமிக்க இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர்தம்
பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
‌தேவ இரத்த இரகசியத்தை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே
மாசில்லாத கன்னியினின்று
நமக்கென்றே பிறக்கலானார்
அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான
‌வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே
வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில்
சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின்
உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர்
பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத் தாமே திவ்ய உணவாய்
தம் கையாலே அரிளினாரே

No comments: