Tuesday, September 2, 2008

பொன்னும் பொருளும்

பொன்னும் பொருளிமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்(2)
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயேயெனச் சொல்லிவந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ நீயோ
என்னை ஆளும் மன்னவனன்றோ

நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ- என்
நிம்மதி இழந்து நின்றேன்
வ‌ள‌மில்லா வாழ்வினில் வ‌ச‌ந்த‌ங்க‌ள் தேடி நான்
அள‌வில்லா பாவ‌ம் செய்தேன்
த‌ன‌து இன்னுயிரை ப‌லியென‌த் த‌ந்த‌வ‌ரே
உன‌க்கு நான் எதைய‌ளிப்பேன்- இன்று
உன‌க்கு நான் எனைய‌ளித்தேன்

வ‌றுமையும் ஏழ்மையும் ப‌சியும் பிணியும்
ஒழிந்திட‌ உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அற‌மும்
நிலைத்திட‌ ப‌ணி செய்வேன்
த‌ன‌து இன்னுயிரை ப‌லியென‌த் த‌ந்த‌வ‌ரே
உன‌க்கு நான் எதைய‌ளிப்பேன் இன்று
உன‌க்கு நான் எனைய‌ளித்தேன்

No comments: