Monday, September 29, 2008

பெத்லகேம் ஊருக்கு


பெத்லகேம் ஊருக்குச் சென்றிடுவோம்- அந்த
பாலனைக் கண்டிடுவோம்
பேரின்பம் அனைத்தும் குழந்தை வடிவில்
ஒளிரும் காட்சியைக் கண்டிடுவோம்- பெத்லகேம்

உண்மை ஒளியாய் உதித்ததே
வேற்றுமை அகற்றப் பிறந்ததே
இறைமை வடிவைக் கொணர்ந்ததே-2
மாமரியின் நல்மகனாய்
மனித உரவை எடுத்ததே-2

இருண்ட உலகை மீட்கவே
மருண்ட மனதை தேற்றவே
உலகின் ஒளியாய் பிறந்தாரே-2
உள்ளமதை கொள்ளை கொள்ளும்
குழந்தை வடிவில் உதித்தாரே-2

உள்ளங்கள் ஒன்று சேரவே
உரிமைகள் என்றும் நிலைக்கவே
உன்னத தேவன் உதித்தாரே-2
ஊனுடலில் உருவெடுத்து
உண்மையை நாட்டிட பிறந்தாரே-2

No comments: