
பெத்லகேம் ஊருக்குச் சென்றிடுவோம்- அந்த
பாலனைக் கண்டிடுவோம்
பேரின்பம் அனைத்தும் குழந்தை வடிவில்
ஒளிரும் காட்சியைக் கண்டிடுவோம்- பெத்லகேம்
உண்மை ஒளியாய் உதித்ததே
வேற்றுமை அகற்றப் பிறந்ததே
இறைமை வடிவைக் கொணர்ந்ததே-2
மாமரியின் நல்மகனாய்
மனித உரவை எடுத்ததே-2
இருண்ட உலகை மீட்கவே
மருண்ட மனதை தேற்றவே
உலகின் ஒளியாய் பிறந்தாரே-2
உள்ளமதை கொள்ளை கொள்ளும்
குழந்தை வடிவில் உதித்தாரே-2
உள்ளங்கள் ஒன்று சேரவே
உரிமைகள் என்றும் நிலைக்கவே
உன்னத தேவன் உதித்தாரே-2
ஊனுடலில் உருவெடுத்து
உண்மையை நாட்டிட பிறந்தாரே-2
No comments:
Post a Comment