Monday, September 1, 2008

காணிக்கை தந்தோம்

காணிக்கை தந்தோம் தேவா-எம்மை
கனிவோடு கரம் தாங்கி ஏற்பாய்-2
எம் வாழ்விலே உம் கனவை வாழ‌-2
அருளாகி நிறைவாக தினந்தோறும் தாரும்

மனுவாக வந்தாய் மண் வாழ்விலே
நலமான இறையாட்சியே-2
மனித நலம் காக்க மாண்போடு வாழ‌-2
எம் உயர்வையும் பிறர் உயர்வையும்
உம் பாதம் வைத்தோம்(2)
இறைவா எங்கள் தலைவா
நிறைவாய் வரங்கள் தருவாய்-2

நலமாக எந்நாளும் உருவாகவே
நலம் காணும் நல்வாழ்விலே-2
சாதி சமயம் நீங்க சம வாழ்வு ஓங்க‌-2
எம் உணர்வையும் பிறர் உணர்வையும்
உம் பாதம் வைத்தோம்-2
இறைவா எங்கள் தலைவா
நிறைவாய் வரங்கள் தருவாய்(2)

No comments: