Wednesday, September 17, 2008

எந்தன் இதய

எந்தன் இதய இனிய வேந்தன்
என்னில் வந்து தங்கும் நேரம்
வந்ததும் வசந்தம் வீசுமே
வசந்தத்தில் வாழ்வுண்டு வாழ்வில் அவனுண்டு
என்னில் அவனும் அவனில் நானும் என்றும் ஒன்றுதானே

வாழ்க்கை மூச்சு நின்றுவிடும் அன்றே
வீசிடும் காற்று நீ எனில் இல்லை என்றால்
ஓடோடி வந்தேன் உனை என்னில் ஏற்க
‌ஒன்றாகும் நேரம் நான் உன்னைப் பாட
‌ஆ..ஆ..ஆ..ஆ.. அன்பு தெய்வமே அருள் தாருமே
நீ மீட்டும் வீணையும் நான் பாடும் பாடலும்
இறைகடலில் சங்கமிக்கும் இதய வேந்தனே

நிம்ம‌தி நீயாய் இருக்கின்ற‌ போது
நித‌மும் நீ என்னில் த‌ங்கிட‌ வேண்டும்
சிந்த‌னைக‌ள் யாவும் சீர்ப‌டுத்த‌ வேண்டும்
சொல் செய‌ல் யாவும் தூய்மையாக‌ வேண்டும்
ஆ..ஆ..ஆ..ஆ..அன்பு தெய்வ‌மே அருள் தாருமே
என் வ‌றுமை எனும் இருள் உன் வ‌ள‌மை ஒளியிலே
அக‌ன்றிட‌ வேண்டும் என் அன்பு தெய்வ‌மே

No comments: