Monday, September 1, 2008

எல்லையில்லா அன்பு

எல்லையில்லா அன்பிலே
என்னை வள‌ர்க்கும் தெய்வமே
சொல்ல இயலா நன்றியில்
சின்ன இதயம் நான் தந்தேன்-எல்லையில்லா

முறிந்த உறவுகள் பகைமை உணர்வுகள்
உடைந்த உள்ளங்கள் எளிய அப்பமே
அறிந்தும் நான் செய்த பிழைகள் யாவும்
தன்னல மனங்கள் ரசமுமாகும்
இவையாவும் ஏற்றென்னை மாற்றிடுவாய்-உன்
தியாக வாழ்வில் உயிக்கச் செய்வாய்- எல்லை

கடந்த பாதையில் கல்லும் முள்ளும்
சொல்லும் செயலும் மறைந்த நேரங்கள்
உயர்ந்த மலை போல் அன்பு தெய்வம்
பாதை பிரிந்து வாழும் உறவுகள்
இவையாவும் ஏற்றென்னை மாற்றிடுவாய்-உன்
தியாக வாழ்வில் உயிக்கச் செய்வாய் - எல்லை

No comments: