Saturday, September 27, 2008

அன்னை மாமரி

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரை தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம்

எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய்-2
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய் மரியே எம்மை
அரவணைத்திக் காப்பாய் நீயே

அண்ணல் இயேசு அன்பின் வழியைக் கற்றுத் தந்த உன்
அன்பு மிகு ஆதரவில் அச்சம் நீங்குதே-2
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய் மரியே எம்மை
அரவணைத்திக் காப்பாய் நீயே

No comments: