மார்கழியில் உதித்த மன்னவனே உன்
மகிமையைத் துறந்து மண்ணகம் வந்தாய்
மனிதத்தை இழந்த இம்மண்ணில் நீ
மனுவாய் மலர்ந்து விந்தையுமானாய்
வருந்தியே உழைத்தும் வறியவரானோர்
உண்மையில் நடந்தும் ஊர்பழி சுமந்தோர்
அன்புக்கு பணிந்து அவமானம் அடைந்தோர்
அவனியை மாற்ற அடி உதை ஏற்றோர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்
புனிதத்தில் வாழ்ந்து மனிதத்தை மறந்தோர்
செல்வத்தில் திளைத்து செருக்குடன் வாழ்ந்தோர்
அரியணை ஏறி அடக்கியே ஆள்வோர்
அணு ஆயுதத்தால் அகிலத்தை அழிப்போர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment