Monday, September 29, 2008

மார்கழியில் உதித்த

மார்கழியில் உதித்த மன்னவனே உன்
மகிமையைத் துறந்து மண்ணகம் வந்தாய்
மனிதத்தை இழந்த இம்மண்ணில் நீ
மனுவாய் மலர்ந்து விந்தையுமானாய்

வருந்தியே உழைத்தும் வறியவரானோர்
உண்மையில் நடந்தும் ஊர்பழி சுமந்தோர்
அன்புக்கு பணிந்து அவமானம் அடைந்தோர்
அவனியை மாற்ற அடி உதை ஏற்றோர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

புனிதத்தில் வாழ்ந்து மனிதத்தை மறந்தோர்
செல்வத்தில் திளைத்து செருக்குடன் வாழ்ந்தோர்
அரியணை ஏறி அடக்கியே ஆள்வோர்
அணு ஆயுதத்தால் அகிலத்தை அழிப்போர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

No comments: