Wednesday, September 17, 2008

ஒளியாய் மழையாய்

ஒளியாய் மழையாய் நீ பொழிந்தால்
வளர்வேன் செழித்தெ உயர்ந்திடுவேன்(2)
கனிவாய் பரிவாய் நீ அணைத்தால்
இனிதாய் புதிதாய் மலர்ந்திடுவேன்
இறைவா முதல்வா வழிகாட்டு- என்
இதயம் உன் இல்லம் விளக்கேற்று -ஒளியாய்

துணையாய் அருகே நீ வ‌ந்தால் எந்தத்
தொலைவும் எளிதாய் க‌ட‌ந்திடுவேன்(2)
சுனையென‌ அன்பு சுர‌ந்து வ‌ந்தால்- நான்
சுக‌மாய் ம‌கிழ்வாய் ந‌ட‌ந்திடுவேன்- இறைவா

ஆற்ற‌லும் அருளும் நீ த‌ந்தால்
ஓராயிர‌ம் ப‌ணிக‌ள் ஆற்றிடுவேன்(2)
தேற்றிட‌ நீயும் அருகிருந்தால்- எந்த‌த்
துய‌ர‌ச் சுமையும் தாங்கிடுவேன்- இறைவா

No comments: