ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய்(2)
பலிப்பீடமுமாய் அலங்கரித்தாயே(2)
பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உனையே பரமன்
தாய் உதரம் நீ தரித்திடவே(2)
தனதோர் அமலன் தனமெனக் கொண்டார்(2)
வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே(2)
வானோர் துதிக்கும் இறைவியே வாழி(2)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment