
அன்பைப் பாடிடுவோம் -அவள்
அன்பைப் பாடிடுவோம்
கன்னிமையில் இறைவன் உருகொடுத்தார் -அந்த
முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள்
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தாள்-2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்
பாவமதால் மனிதன் அருளிழந்தான்- அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டார்
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார்-2
பாரினில் அவர் புகழ் பாடிடுவோம்
No comments:
Post a Comment