
கலங்களின் தாரகையே
துலங்கிடும் மணியே
கலங்குவோர்க் கதியே
காத்திடுவாய் தாயே
மாதர்களின் மாதிரியே
மாயிருளில் ஒளி தாரகையே
மாதரசியே மனவொளி தாராய்
மாசு அகலச் செய்வாய்
தாயெனவே தாவி வந்தோம்
சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி
கூவிடும் குரல் கேளாய்
No comments:
Post a Comment