Monday, September 29, 2008

கலங்கரை தீபமே

கலங்கரை தீபமே
கலங்களின் தாரகையே
துலங்கிடும் மணியே
கலங்குவோர்க் கதியே
காத்திடுவாய் தாயே

மாதர்களின் மாதிரியே
மாயிருளில் ஒளி தாரகையே
மாதரசியே மனவொளி தாராய்
மாசு அகலச் செய்வாய்

தாயெனவே தாவி வந்தோம்
சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி
கூவிடும் குரல் கேளாய்

No comments: