அழகின் முழுமையே தாயே
அலகையின் தலை மிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே
அமலனை எனக்களித்தாயே
இருளை சூழ்ந்திடும் போதே
உதயத் தாரகை போல
அருளேநிறைந்த மாமரியே
அருள் வழி காட்டிடுவாயே
அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனை பின் செல்வோம்
உன்னைத் துணையாய் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment