உணவாக எழும் தெய்வமே
உறவாட எனில் வாருமே
தனைத் தந்த தெய்வம்
எனை ஆள வந்தால்
தனிமைகள் பறந்தோடுமே
தனியின்பம் எனை சூழுமே ஓ....
பிரிந்ததால் வீழ்ந்திட்ட மானிடத்தை
இணைத்திட தோன்றிய தேனமுதே
பகைமையால் வளர்ந்திட்ட பிளவுகளை
போக்கிட மலர்ந்திட்ட வான் கவியே
திருவுணவும் திருப்பானமும்
உனதுறவை எடுத்துச்சொல்லும்(2)
ஒரு பந்தி சம பந்தி
எந்நாளும் மலரச் செய்யும் ஆ.....
காலமெல்லாம் திருவுணவில் தனை வழங்கும்
கரையில்லா உனதன்பை நான் மறவேன்
கலங்கிடும் வேளையில் கை விடாமல்
கரம்பிடிக்கும் என் தேவா உனைப்பிரியேன்
காத்திருக்கும் கண்களுக்கு
காட்சியாக நீ வருவாய்(2)
கனிவுடனே தங்கிடுவாய்
ஏழை என் நெஞ்சினிலே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment