Tuesday, September 30, 2008

மாண்புயர் இந்த

மாண்புயர் இந்த அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
‌புதிய நியம முறைகள் வருக‌
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாலாக் குறையை நீக்க‌
விசுவாசத்தின் உதவி பெறுக‌

பிதா அவர்க்கும் சுதனவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவுமாக‌
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக- ஆமென்

No comments: