Tuesday, September 2, 2008

பலியென எனை

பலியென எனைத் தருவேன்- உம்
பலியினில் எனை இணைத்தேன்
பகிர்தலில் நாளும் வளர‌
பணிந்தே எனைத் தருவேன்

வாழ்வது நானல்ல எந்தன் இயேசுவே வாழ்கின்றீர்
எந்தன் உடல் பொருள் ஆவி எல்லாம்
உமக்கே தருகின்றேன்-2
என்னையே ஏற்று வாழ‌
உமதருள் கேட்கின்றேன்-2

திராட்சை கொடி என்றீர்-அதன்
கிளைகள் நீர் என்றீர்
எனக்குள் இருப்போரெல்லாம்
என்றுமே வாழ்வாரென்றீர்-2
பிறரையே ஏற்று வாழ‌
உம் வரம் கேட்கின்றேன்-2

No comments: