Wednesday, September 17, 2008

நெஞ்சில் சுரக்கும்

நெஞ்சில் சுரக்கும் நன்று சுரங்கள்
நானிலமெங்கும் நான் பாட
‌நந்தவனத்தில் உண்டு களிக்கும்
வண்டுகள் பாடும் பண் போல
‌விண்ணில் தெறித்தும் மின்னல்களாய்
மண்ணில் முளைத்திடும் நல் விதைகள்
மின்னித்தெறித்திடும் மின்னல்களாய்
கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள்
நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன்
நானிலமெங்கும் உன் புகழ் சொல்வேன்

தோளழுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்க‌
தோழமையில் பூமியிலே புதுவுலகம் படைக்க
‌நெஞ்சுக்குள்ளே புரட்சிக் கனலை யார் வைத்தது
அஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும்
எல்லாமே நீ தந்தது-2

எல்லையில்லா உலகிலே எனக்கு உயிர் தந்தாய்
எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய்
ஈரமுள்ள உறவுகளை யார் தந்தது
இறையரசின் நினைவுகளும் யார் தந்தது
புதுயுகத்தின் கனவுகள்
புன்னகைக்கும் உறவுகள்
எல்லாமே நீ தந்தத-2

No comments: