Saturday, September 6, 2008

உறவாடும் நேரமிது

உறவாடும் நேரமிது உனைக் காணும் காலமிது
என் இயேசுவே நாளுமே
இதயம் வாருமே

மலராகினாலும் சருகாகினாலும்
எனையே உனதாக்கினாய்
மலையாகினாலும் மடுவாகினாலும்
நிலவே எனை நோக்கினாய்
அரணாய் என்னை நீ சூழ்ந்து நின்றாய்
தாயின் கருவில் எனைத் தேர்ந்த தெய்வம்
உன்னில் மகிழ்கின்றேன்

பதராக என்னை ஊர் பார்க்கும்போது
பயிராக நீ மாற்றினாய்
பகையோடு என்னைப் பிரிந்தாளும் போது
அன்பே எனை நோக்கினாய்
துரும்பான என்னை விரும்பினேன் என்றாய்
என் வாழ்வின் பொருளாய் நீயாகும்போது
எதையும் தாங்குவேன்

No comments: