Monday, September 1, 2008

காணிக்கையாக

காணிக்கையாக நான்வந்தேன்-உந்தன்
கமலபாதம் சரணடைந்தேன்(2)
ஏற்றருள்வீர் என்னை ஆண்டவரே(3)

வானும் மண்ணும் உம் சொந்தமாமே
உம்மலர் பாதம் சரணடைந்தேன்
வாழ்வும் வழியும் உம் சொந்தமாமே
உம்மலர் பாதம் சரணடைந்தேன்
உம் அன்பெனக்கென்றுமே மிக இனிமையானது
உம் அருளெனக்கென்றுமே போதுமானது
சரணம் இயேசுவே சரணம் இயேசுவே
சரணம் இயேசுவே சொந்தமானேன்-காணிக்கை

உட‌ற் பொருள் ஆவி உம் சொந்த‌மாமே
உம்மலர் பாதம் சரணடைந்தேன்
உழைப்பின் ப‌ய‌னும் உன் சொந்த‌மாமே
உம்மலர் பாதம் சரணடைந்தேன்
உம் வாக்கென‌க்கென்றுமே நிலை வாழ்வு த‌ருவ‌து
உம் இர‌க்க‌மென‌க்கென்றுமே தேவையான‌து
சரணம் இயேசுவே சரணம் இயேசுவே
சரணம் இயேசுவே சொந்தமானேன்-காணிக்கை

No comments: