Saturday, September 6, 2008

அன்பு தேவன்

அன்பு தேவன் சொன்ன வாக்கு
அழிவு காண்பதில்லை என்று
வாழும் மாந்தர் காணும் பாதை
புதிய உலகம் சேருமே
தன்னைத் தந்த தலைவன் அவரை
உறவு வாழ்வில் சுவைத்து மகிழ்ந்தால்
நெஞ்ச நிறைவு தந்து தேற்றும்
இனிய அமைதி தோன்றுமே
கண்டுகொண்டோம் இயேசுவே உம்மையே
காலமெல்லாம் காக்கும் உந்தன் அருளையே- அன்புதேவன்

திராட்சைக்கொடி நானே என்று தன்னை அளித்தார்
நீங்கள் அதன் கிளைகள் என்று நம்மை அழைத்தார்
நல்லமேய்ப்பன் நானே என்று தன்னையே தந்தார்
நீங்கள் என் மந்தை என்று நம்மை இணைத்தார்
நண்பனுக்காய் உயிர்தருதல் மேலான அன்பு
அன்புக்கு இலக்கணமே இயேசுவே
உறவின் பாலம் இயேசுவே உதய கீதம் இயேசுவே
எல்லார்க்கும் எல்லாமே இயேசுவே -அன்புதேவன்

வானில் உணவு நானே என்று தன்னைத் தந்தாரே
என் நினைவில் வாழ்க என்று நம்மை அழைத்தார்
உலகின் ஒளி நானே என்று தீபம் ஆனாரே
தீப ஒளியை நாடு என்று நம்மைப் பணித்தார்
உலகத்தின் இறுதி வரை உன்னோடி வாழ்வேன்
வாழ்வுக்கு ஆதாயம் இயேசுவே
தியாக தீபம் இயேசுவே வாழ்வின் உணவு இயேசுவே
எல்லார்க்கும் எல்லாமே இயேசுவே- அன்புதேவன்

No comments: