Friday, September 5, 2008

அன்பனே விரைவில்

அன்பனே விரைவில் வா- உன்
அடியேனைத் தேற்றவா
அன்பனே விரைவில் வா

பாவச்சுமையால் பதறுகிறேன்
பாதை அறியாது வருந்துகிறேன்
பாதை காட்டிடும் உன்னையே நான்
பாதம் பணிந்து வேண்டுகிறேன்

இருளே வாழ்வில் பார்க்கின்றேன்
இதயம் நொந்து அழுகின்றேன்
ஒளியாய் விளங்கும் உன்னையே நான்
வழியாய் ஏற்று கொள்ளுகிறேன்

No comments: