
அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு
அழியாத ஆன்மாவின் விருந்தாகவே
என்னில் எழுந்தே நீ வா- உன்
ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே
என்னில் இசை பாடவா
கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்
தெய்வமே செல்வமே
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ
அழகான ஆன்மாவில் வருகின்றவர்
என்னை உருவாக்கவா- நல்
அணையாத தீபமாய் திகழ்கின்றவா
ஆன்ம ஒளி ஏற்றவா
சிறு திரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்
தெய்வமே செல்வமே!
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ
No comments:
Post a Comment