
நல்லது நடக்கும்
துன்பங்களோ துயரங்களோ
சோதனையோ வேதனையோ(2)
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்(2)
மனச்சுமையோ பாரங்களோ
உடற்பிணியோ ஊனங்களோ(2)
பதுவைப் புனிதர் பரிந்துரப்பார்
எல்லாம் வல்லவர் நலம் தருவார்(2)
வறியவரோ சிறியவரோ
முதியோரோ இளையோரோ(2)
பதுவைப் புனிதர் பரிந்துரப்பார்
எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்(2)
No comments:
Post a Comment