Tuesday, September 30, 2008

பதுவையோனே புதுமையில்

பதுவையோனே புதுமையில் புனிதா
பார் புகழ் புண்ணியனே
பாரில் எங்கள் குறையகல‌
பரமனை வேண்டிடுவாய்(2)

பாத்திரனே பரமனின் வழி திகழ் உயர்
கோத்திரனே குருவானவனே(2)
பாவியர் எங்கள் பாவவினை நீக்கி
உன்னத அருள் மழை பொழிந்திடுவாய்- உன்னத

மரியன்னை மகனை திருக்கர‌ம் ஏந்தும்
அருந்த‌வ‌ முனிவ‌னே காவ‌ல‌னே(2)
உள்ள‌ங்க‌ள் உருகி வேண்டிடும் எங்க‌ளின்
குறைக‌ளை நீக்க‌ அருள் பொழிவாய்- குறைக‌ளை

No comments: