Saturday, September 6, 2008

இறைவனின் உடலிது

இறைவனின் உடலிது
அவரது இரத்தமிது
அவர் நினைவாய் நாம் செய்யும்
மீட்பின் சின்னமிது- நம்
வாழ்வின் உணவிது

அப்பத்தை உண்டு கிண்ணத்தைப் பருகும்
வேளைகள் எல்லாம் விசுவாசமே
ஆண்டவர் வருகின்ற நாள்வரை நாமும்
மரணத்தின் அறிக்கை செய்வோமே
ஆதலினால் தகுதியுடன்
அப்பத்தை உண்டிடுவோம்- நாம்
கிண்ணத்தைப் பருகிடுவோம்

பிளவுகள் அகற்றி பிரிவினை மறந்து
விருந்தினை ஒன்றாய்க் கூடிடுவோம்
உறவினை வளர்க்க உள்ளத்தைப் பகிர்ந்து
விருந்தினை உலகினில் படைத்திடுவோம்
தினந்தோறும் திருவிருந்தில்
இறைவனில் கலந்திடுவோம்- இறை
நிழலாய் வாழ்ந்திடுவோம்

No comments: