Saturday, September 27, 2008

அம்மா எங்கள் தாயே

அம்மா எங்கள் தாயே உனைப் பாடாத நாவில்லையே
அருகே நீயும் வரவே உனைத் தேடாத நாளில்லையே
அந்த மேலோக மண்ணிலா தாயாக என்னிலா பூலோகம் வந்த வெண்ணிலா
என்னைத் தேடி அம்மா

ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே
கான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே
ஏந்தி வந்த சுமையெல்லாம் கனவாகுதே
சுகராகம் பாட எங்கள் மனம் தேடுதே
மரியே உன்னை அடைந்தோம் நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே- அம்மா

கோடான கோடி மக்கள் குறை தீரவே
தின‌ந்தோறும் தேடி வ‌ரும் தாய் நீய‌ல்லோ
கூடிவ‌ந்து திருப்பாத‌ம் ச‌ர‌ணாவ‌தால்
ஆன‌ந்த‌ கான‌மிங்கு அலைபாயுதே
ம‌ல‌ரே ம‌ல‌ரும் நில‌வே உள்ள‌ம் ம‌கிழ்ந்தோம் உன்னிலே- அம்மா

No comments: