தாவீதின் குல மலரே- ஒளி
தாங்கிடும் அகல் விளக்கே- என்னைக்
காத்திடும் ஆரணங்கே- அருள்
சுரந்திடும் தேன் சுனையே
இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்
கறை சிறிதில்லாக் காத்திருந்தார்
மறையவர் புகழும் மாமணியே
கரை சேர்ப்பதுவே உன் பணியே- தாவீதின்
மக்களின் மனமே மகிழ்ந்திடவே
நற்கனி சுதனை எமக்களித்தாய்
கற்றவர் மற்றவர் யாவருமே
பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா- தாவீதின்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment