Tuesday, September 2, 2008

வாழ்வைப் பலியாய்

வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்
என்னையே ஏற்றிடுவாய்
முழுமனதுடனே கையளிக்கின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய்

கோதுமை மணியும் திராட்சை கனியும்
புது உரு பெறுவது போல்(2)
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர் தருவோம்

நான் வாழப் பிறரும் பிறர் வாழ நானும்
தேவை என்றுணர்ந்தேன்(2)
சமத்துவ சகோதர நோக்குடனே
புது யுகம் காண்போம் அகத்தினிலே

No comments: