Tuesday, September 9, 2008

என் மன்னவா

என் மன்னவா என்னில் இறங்கி வா(2)
தினமும் எந்தன் உணவாய் என்றும்
என்னில் மகிழ வா
ஆன்ம ஜோதியே என்றும்
என்னில் மகிழ வா

பாட்டிசைத்து பாட வந்தேன்
உந்தன் மனம் மகிழுதே
காலமெல்லாம் காத்திருந்தேன்
உந்தன் சொந்தம் தேடுதே
என் உயிரே என் உறவே
எந்தன் உள்ளம் எழுந்து வா
ஆ....ஆ.... என் உயிரே
தினம் தினம் என்னில் வா
என்னில் வாழ வா
உயிரில் கலந்து வா -என் மன்னவா

நெஞ்சமெனும் கோவிலிலே
தெய்வமாய் எழுந்து வா
தஞ்சமென்று ஓடி வந்தேன்
நலம் தந்து அணைக்க வா
அன்புருவே ஆர‌முதே
அன்ப‌ர் எம்மில் எழுந்து வா
ஆ....ஆ... அன்புருவே
தினம் தினம் என்னில் வா
என்னில் வாழ வா
உயிரில் கலந்து வா- என் மன்னவா

No comments: