Monday, September 1, 2008

கானங்கள் பாடும்

கானங்கள் பாடும் காலை
ஆனந்தமே என் ராகம்
அர்ப்பணித்தேன் என் ஆருயிரை
வாழ்வை உன் கரங்களில் கையளித்தேன்‍‍‍‍-கானங்கள்

உன் மடி அமர்ந்து உன்னையே பழித்தல்
உறவென்றாகுமா
உன் மொழி கேட்டும் என்வழி வாழ்தல்
உன்னிடம் சேர்க்குமா - உன் மடி
உன்பணி தொடர வருகின்றேன்
உள்ளத்தைத் தருகின்றேன்- எந்தன்
உள்ளத்தைத் தருகின்றேன்

உழைக்கும் மாந்தர் உயரும் நிலையும்
உலகில் மலரணும்
உழைப்பின் மாண்பை வளர்க்கும் செயல்கள்
உண்மையில் நிலைக்கணும் -உழைக்கும்
உரிமைக‌ள் உண‌ர்ந்து வ‌ருகின்றேன்
உன்னிட‌ம் த‌ருகின்றேன்- என்னை
உன்னிட‌ம் த‌ருகின்றேன்

No comments: