
என் மனம் அறிந்து நீ உன் கையில் ஏற்றிடுவாய்
உண்மைக்காக வாழ்ந்திடும் நெஞ்சம் என்னில் உண்டு
உயிர் கொடுக்கவும் துணிந்திடும் உந்தன் பாதை சென்று
என் நெஞ்சில் வாழ்வது நீதானே
இனி அச்சம் கொள்வதும் வீண்தானே
எந்தன் பணியில் ஆயிரம் தடைகள்
வந்திடும் ஆயினும் இயேசுவே
உனது வழியில் பயணம் தொடரும்
எந்தன் வாழ்வின் பொருளினை உந்தன் வாழ்வில் கண்டேன்
சுயநலத்தின் திரைகளை களைந்து என்னைத் தந்தேன்
ஒரு ஜீவன் என்னாலே உயிர் வாழ்ந்தால்
அது தானே உன் முன்னே பெரிதாகும்
மகிழ்வைத் தேடிடும் மானிடர் வாழ்ந்திட
தந்திடும் என்னை இயேசுவே
உனது கரத்தில் ஏற்க வேண்டி
No comments:
Post a Comment