Thursday, August 28, 2008

அன்பின் பலியாய்

அன்பின் பலியாய் ஏற்பாய் உம்மை
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்(2)
புண்படும் மனதின் துயர் தீர்ப்பாய்- எம்மை
புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்

வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம்- அருள்
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம்
முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் எம்மை
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்

படைப்பின் மீதே பரிவிருக்க- அந்தப்
பரிவால் உன்மகன் உயிர் கொடுக்க‌
படைப்பே உம்மால் மகிழ்ந்திருக்க- உம்மில்
படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க‌

No comments: