
அவரின் பாதம் அணி திரள்வோம்
இத்தனை இகம் வாழ் உயிர்களுமே
இயேசுவை வணங்கிடுமே(2)
ஆலய மணியின் ஓசையைக் கேட்போம்
ஆயனே நம்மை கூப்பிட கேட்போம்
ஆவியின் அருளால் அற வழி நடப்போம்
அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம்
அன்பினில் இணவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம்.... நாம்.....(2)
ஆலயக்கதவு திறந்திடப் பார்த்தோம்
ஆண்டவன் சந்நிதி வணங்கியே நின்றோம்
அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்
அவரின் அருளால் ஆறுதல் அடைவோம்
அன்பினில் இணவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம்.... நாம்.....(2)
No comments:
Post a Comment