Wednesday, August 13, 2008

அன்பினில் அகிலம்

அன்பினில் அகிலம் வாழ்ந்திட- உம்
அமைதியின் தூதனாய்
என்னை மாற்றுமே இறைவனே- எனை
மாற்றுமே தலைவனே

பகைமை உணர்வால் வாடும் மனதை
பாசம் கொண்டு மாற்றவே
வேதனை சுமந்து செல்லும் மனதில்
மனப் புண்கள் ஆற்றவே
ஐயம் கொண்டு வீழும் நேரம்
நம்பிக்கை தந்து வாழவே என்
இறைவனே அருளுமே- என்
தலைவனே அருளுமே

ஆறுதல் தேடி அலைந்திடாமல்
துணையாய் நின்று வாழ்ந்திட‌
பிறரை என்றும் ஏற்று வாழ்ந்து
உறவில் நாளும் வளர்ந்திட‌
எனையே முழுதும் வழ்ங்கி நாளும்
வாழ்வில் முழுமை அடைந்திட என்
தலைவனே அருளுமே- என்
தலைவனே அருளுமே

No comments: