
எந்த துன்பம் நமக்கில்லை
உண்மை தெய்வம் நமக்குள் இருக்க
பயமு மில்லையே(2)
ஒன்று கூடுவோம் சேர்ந்து வாழ்வோம்
இறைவன் ஆட்சி மண்ணில் அமைப்போம்(2)
பயணம் தூரம் சென்றாலும் பயங்கள் இல்லையே
பாதை தடுமாறினாலும் கவலை இல்லையே(2)
நம் ஆயன் நம்மோடு இருக்கின்றபோது
அன்போடு தோளில் நம்மைத் தாங்கிக்கொள்கிறார்(2)
ஒன்று கூடுவோம் சேர்ந்து வாழ்வோம்
இறைவன் ஆட்சி மண்ணில் அமைப்போம்(2)
சொந்த பந்தம் அழிந்தாலும் தனிமையில்லையே
நோய்கள் நம்மி அழித்தாலும் மரணம் இல்லையே(2)
நம் இயேசு நம்மோடு இருக்கின்றபோது
வாழ்வாக நம்மை என்றும் நிறைவு செய்கிறார்(2)
ஒன்று கூடுவோம் சேர்ந்து வாழ்வோம்
இறைவன் ஆட்சி மண்ணில் அமைப்போம்(2)
No comments:
Post a Comment