ஓ என் ஆத்துமமோ
ஏக்கமாய் இருக்கின்றது
நிலையான வான் வீடு
நுழைகின்ற தருணம் எப்போது வருமென்று?
ஆயிரமாயிரம் தூதர்கள் பாடலை
கேட்கவே துடிக்கின்றது
பன்னிரு அரியணை அலங்காரத் தோற்றத்தைக்
காணவே துடிக்கின்றது
ஆனந்தம் அதுவல்லவா!
பேரானந்தம் அங்கல்லவா!
பன்னிரு விண்மீன்கள் தலையதில் சூடிய
அன்னையாம் மரியாளை
அவரது தலைமையில் தோன்றிடும் புனிதரை
காணவே துடிக்கின்றது
ஆனந்தம் அதுவல்லவா!
பேரானந்தம் அங்கல்லவா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment