Wednesday, August 13, 2008

வாருங்கள் அன்பு மாந்தரே

வாருங்கள் அன்பு மாந்தரே
பலி செலுத்த வாருங்கள்
பண் இசைத்துப் பாடுங்கள்
வாருங்கள் அன்பு மாந்தரே

இயேசு என்னும் ஆதவன் கதிர் விரிக்கக் காணுங்கள்
இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள்
ஆசை என்ற இருள் மறைத்து அன்பு உதயமாகவே-2
அருள் வளங்கள் இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்

அன்பு என்றால் என்னவென்று அவரைக் கேட்டுப் பாருங்கள்
அத்தனையும் தருவதுதான் அன்பு என்று கூறுவார்
தன்னை ஈந்து அன்பு செய்த தேவன் இங்கு வருகின்றார்-2
நம்மை முற்றும் தந்து இன்று யாவும் பெற்றுத் திரும்புவோம்

No comments: