Wednesday, August 13, 2008

தீபத்தின் ஒளியினில்

தீபத்தின் ஒளியினில் இணைவோம்
திருப்பலி செலுத்திட விரைவோம்
புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்ந்திட‌

நல்வாழ்வின் தீபங்களாய் -இங்கு
நாளெல்லாம் ஒளிர வாருங்களே
நல் வாழ்வின் தேவைகளை- நிதம்
நல்லோர்க்கு இயேசு தந்திடுவார்
அவரின் இல்லம் தினம் வந்தால்- நம்
உள்ளங்கள் ஒளியால் நிறைந்திடுமே(2)
அன்பு செய்யும் உள்ளங்களே
இறைவனின் அருட்பெரும் இல்லங்களே

இயேசுவோடு நாம் நடந்தால்- என்றும்
நம் வாழ்வில் தோல்விக்கு இடமில்லையே
நன்மை செய்து நீ மகிழ்ந்தால்- இங்கே
உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே
வார்த்தை இங்கு மனுவானார்- நம்
வாழ்வினில் என்றும் குடி கொண்டார்(2)
அன்பு செய்யும் உள்ளங்களே
இறைவனின் அருட்பெரும் இல்லங்களே

No comments: