Wednesday, August 13, 2008

புத்தொளி வீசிட

புத்தொளி வீசிட பூமணம் கமழ்ந்திட‌
புதிய நாள் பிறந்தது
அருளொளி தோன்றிட அகமெங்கும் சூழ்ந்திட‌
புனித நாள் மலர்ந்தது(2)
புதிய மனம் கொண்டு பினித பீடன் சென்று
தூயவர் பலியில் கலந்திடுவோம்-2- புத்தொளி

இறைவன் நம்மை அழைத்ததால் நாமும்
இறைவனின் பிள்ளைகள் ஆனோம்
இறைவன் நம்மைத் தேர்ந்ததால் அரசக்
குருத்துவ திருக்கூட்டம் ஆனோம்
பறை சாற்றுவோம் அவர் புகழை
பாரெங்கும் ஒலிக்கச் செய்வோம்-2
வாருங்கள் வாருங்கள் இறைவனைப் புகழ்வோம்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனில் மகிழ்வோம்-2

இறைவனின் அன்புச் செயலினால் நாமும்
அவரது உடமைகள் ஆனோம்
இறைவனின் அன்பு வார்த்தையால் அருள்
அருவியில் நனைந்தவராவோம்
அணுகிச் செல்வோம் அவர் பாதம்
அழியாத வார்த்தை கேட்போம்-2
வாருங்கள் வாருங்கள் இறைவனைப் புகழ்வோம்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனில் மகிழ்வோம்-2

No comments: