Monday, August 11, 2008

ஆலயத்தில் நாம்

ஆலயத்தில் நாம் நுழைகையிலே- புது
நினைவுகள் எழுகின்றன அந்த‌
நினைவுகளின் புது வருகையிலே -நம்
நெஞ்சங்கள் நிறைகின்றன் ஆ...

அன்பான மகனை பலி கொடுத்த‌
அபிரகாம் இங்கே தெரிகின்றார்(2)
பண்பான ஆட்டினை பலி ஈந்த‌
ஆபேலும் இங்கே தெரிகின்றார்

எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்
ஏசுவும் அங்கே மொழிந்தாரே(2)
என் வீடு இது என் ஜெப வீடு
வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்

No comments: