Sunday, August 3, 2008

அருட்கரம் தேடி

அருட்கரம் தேடி உன் ஆல‌ய‌ பீட‌ம்
அலை அலையாக‌ வ‌ருகின்றோம்
அருவியாய் வ‌ழியும் உன் அருளினில் ந‌னைய‌
ஆன‌ந்த‌மாக‌ வ‌ருகின்றோம்

ஆயிர‌ம் ஆயிர‌ம் ஆசைக‌ளால்
ஆடிடும் ஓட‌மாய் என் வாழ்க்கை(2)
மூழ்கிடும் வேளையில் என் த‌லைவா
உன் க‌ரம் தானே எம்மை க‌ரை சேர்க்கும்- பெரும்
புய‌லோ எழும் அலையோ நித‌ம் வ‌ருமோ ஒளி இருக்க
‌நாளுமே எம்மை காத்திடும் உந்த‌ன்- அருட்கர‌‌ம்

ஆறுத‌ல் தேடும் இத‌ய‌ங்க‌ளோ
அன்பினைத் தேடி அலைகின்றது(2)
தேற்றிட‌ விளையும் எம் த‌லைவா உம்
தெய்வீக‌ க‌ர‌ம்தானே எமைத் தேற்றும்- புதுப்
பிணியோ வ‌ரும் பிரிவோ துய‌ர் த‌ருமோ துணையிருக்க
‌நாளுமே அன்பாய் காத்திடும் உந்த‌ன்- அருட்க‌ர‌ம்


1 comment:

இளங்குமரன் said...

உண்மையில் மிகப்பெரிய சாதனை ஐயா. இறைவன் அருளால் மிகப்பெரிய பணியைச் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.