Wednesday, August 13, 2008

உன் நினைவில்

உன் நினைவில் உன் திருமுன் சங்கமிப்பேன் - உன்
துணையோடு நாளெல்லாம் பண்ணிசைப்பேன்
என் இயேசுவே....என் ஜீவனே
துணையாகி எனையாளும் தேவ தேவனே
ஸரிகமப....கமபதப....பதப...பதப...பதநிஸ‌
ஸரிஸ.... ஸரிஸ...ஸரிகரிஸா

அலைபோல சோகங்கள் தினந்தோறும் வந்தாலும்
அரண் போல எனைக்காக்கும் என் தெய்வமே(2)
மலை போல பாவங்கள் மனதுக்குள் இருந்தாலும்
மறவாமல் மன்னிக்கும் மாமன்னன் நீ
எந்நாளுமே என் இயேசுவே
என் வாழ்வெல்லாம் உன் தாயன்பிலே- உன் நினைவில்

செல்கின்ற இடமெல்லாம் சொல்கின்ற மொழிகேட்டு
நல்வாழ்வில் உனைக்காணும் வரம் ஒன்று தா(2)
தாழ்ந்தோர்க்கும் வீழ்ந்தோர்க்கும் நற்செய்தி நானாகி
நல்லோராய் மாற்றுகின்ற வாழ்வொன்று தா
உன் வார்த்தையால் உளம் மாற்ற வா
உன் பார்வையால் என்னை குணமாக்க வா- உன் நினைவில்

No comments: