இயேசு எனக்கு போதும் எந்தன் வாழ்வில் நிம்மதி
எந்தக் குறையும் எனக்கு இல்லையே
இன்றும் என்றும் பாடுவேன்நெஞ்சம் மகிழ்ந்து போற்றுவேன்
இரக்கம் அவர் திருப் பெயராம்
உப்பான என் நிலம் செழிக்க வைத்தவர்
உண்மையின் சாட்சியாய் கிருபை தந்தவர்
வந்த புயல் தென்றலாக மாறச் செய்தவர்(2)
வாக்கு மாறா தேவன் அவரே இயேசு என்பவர்
வானத்தையே உடைத்துவிடும் வாக்கு உள்ளவர்
வறியவரை செழிப்பாக்கும் இரக்கம் மிகுந்தவர்
நேர்மையுள்ள மக்கள் மனதில் என்றும் வாழ்பவர்(2)
எந்தன் வாழ்க்கை பொருளுமாகி என்னில் இருப்பவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment