Monday, August 11, 2008

இரக்கம் நிரம்பும்

இரக்கம் நிரம்பும் இறையருட்காலம்
ஒப்புரவில் உறவே காணும்
ஆற்றல் தரும் வசந்த காலம்
அருள் மிகும் நிம்மதி சேரும்
மனம் குணம் இறைநெறி காணும்

மனிதனாக மாறிட மனமாற்றம் தேவையே
இதயத்தை நாம் கிழித்திடுவோம் புத்துயிர் பெறுவோம்-2
இறையரசின் காலம் மிக அருகில் உள்ளது-2
நற்செய்தி கேட்டு நாமும் திருந்தி வாழ்வோம்
ஜெபமும் தவமுமே தினமும் செய்யவே
வளமும் வரங்களும் பெருகி வருகுதே-2

உலகை மாற்ற எண்ண வேண்டாம் நம்மை மாற்றுவோம்
முழுமனித வாழ்க்கையே இறைமகிமை என்போம்-2
தன்னலங்கள் மறந்து பிறர் வாழ உழைப்போம்-2
தரணி வந்த தலைமகனின் தலைமையில் செல்வோம்
அமைதி தூதனாய் அன்பின் கருவியாய்
விண்ணின் மைந்தனாய் மண்ணில் மலருவோம்-2

No comments: