ஒப்புரவில் உறவே காணும்
ஆற்றல் தரும் வசந்த காலம்
அருள் மிகும் நிம்மதி சேரும்
மனம் குணம் இறைநெறி காணும்
மனிதனாக மாறிட மனமாற்றம் தேவையே
இதயத்தை நாம் கிழித்திடுவோம் புத்துயிர் பெறுவோம்-2
இறையரசின் காலம் மிக அருகில் உள்ளது-2
நற்செய்தி கேட்டு நாமும் திருந்தி வாழ்வோம்
ஜெபமும் தவமுமே தினமும் செய்யவே
வளமும் வரங்களும் பெருகி வருகுதே-2
உலகை மாற்ற எண்ண வேண்டாம் நம்மை மாற்றுவோம்
முழுமனித வாழ்க்கையே இறைமகிமை என்போம்-2
தன்னலங்கள் மறந்து பிறர் வாழ உழைப்போம்-2
தரணி வந்த தலைமகனின் தலைமையில் செல்வோம்
அமைதி தூதனாய் அன்பின் கருவியாய்
விண்ணின் மைந்தனாய் மண்ணில் மலருவோம்-2
No comments:
Post a Comment